Skip to main content

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஷ்ரமத்தின் 12வது பீடாதிபதி நியமனத்தை எதிர்த்து வழக்கு

Published on 20/10/2018 | Edited on 20/10/2018
l

 

திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஷ்ரமத்தின் 11வது பீடாதிபதியாக இருந்த ரங்க ராமானுஜ தேசிகர், கடந்த மார்ச் 19ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் மரணமடைந்தார். பின்னர், 12வது பீடாதிபதியாக ஸ்ரீ யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

அவரது ஸ்வீகரம் மற்றும் பட்டாபிஷேகம் இன்றும், நாளையும் ((அக்டோபர் 20, அக்டோபர் 21)) நடக்க உள்ளது. இந்நிலையில், அவரது நியமனத்தை எதிர்த்து சென்னை ஆசிரம சீடரான மயிலை வெங்கட வரதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்ததுபோது, " 2015ம் ஆண்டு பதினொன்றாவது மடாதிபதி எழுதி வைத்த உயிலின்படி தனக்குப் பிறகு மடாதிபதியாக நியமிக்க மூன்றுபேரை பரிந்துரைத்திருந்தார். அதில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் அந்த இருவரையும் பீடாதிபதியாக நியமிக்காமல் மூன்றாவது நபரை  அவசர அவசரமாக நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மனுதாரர் தரப்பில் புகார் கூறப்பட்டது. மேலும், உயிலில் கூறப்பட்டபடி நியமனம் நடைபெறவில்லை எனவும், மரபு மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.  ஆசிரமம், பொது மத அமைப்பு என்பதால் பொது நல வழக்கு தாக்கல் செய்யலாம் என்றார்.

 

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த மடம் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானது என்பதால் பொது நல வழக்கு தொடர முடியாது எனவும் சிவில் வழக்கு தான் தொடர முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும், மத சடங்குகளில் தலையிடுவதில் மதச்சார்பற்ற நீதிமன்றங்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். புதிய மடாதிபதி பொறுப்பேற்க தடைவிதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஷ்ரமம், இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.


 

சார்ந்த செய்திகள்