sripriya

Advertisment

நேற்று முன்தினம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம்அமைச்சர் ராஜேந்திரபாலஜி பேசுகையில்,

நடிகர் கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்படவேண்டிய சப்பாணி குழந்தை.அது வளர்ந்தால் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பெரிய ஆபத்து ஏற்படும். வெளிநாட்டு தீய சக்திகளோடு கமல் பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் அவர் மீது ஏற்படுகிறது என கூறினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அமைச்சரின் இந்த விமர்சனம் குறித்துகமல் பதிலளிக்கையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி எனவும், கூட்டணிக்காக அரசியல் கட்சிகளுக்கு பின் செல்லவில்லை எனவும் பதில் விமர்சனம் கொடுத்துவிளக்கமளித்தார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீப்ரியா இன்று வெளியிட்டுள்ள டுவீட்டில்,

Advertisment

மற்றவர்களைபோல சரியான வளர்ச்சி இல்லாதவர்கள் மாற்றுதிறனாளிகள். அவர்களால் எந்த மக்களுக்கும் பாதிப்பில்லை. ஆனால் உங்கள் அறிவற்ற வசைக்காக அவர்களை இழிவுபடுத்தும் குணத்தை கைவிட வேண்டும்.ஒரு பெண்ணை தலைவராக (ஜெயலலிதா) ஏற்றுக்கொண்ட நீங்கள் இப்படி பெண்மையையும், அவர்கள் ஈன்ற பிள்ளைகளையும் கேவலப்படுத்தும் குணத்தை கைவிட்டால் பெண்ணாகவும், அன்னையாகவும் உங்களை மன்னிக்க முயலுவோம் என தெரிவித்துள்ளார்.