Skip to main content

வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடம் கண் கலங்கிய மகளிர் அணி செயலாளர்!

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

 


திண்டுக்கல் மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளராக இருக்கும்  வளர்மதி ஆரம்ப காலத்திலிருந்து கட்சியில் இருந்து கொண்டு மகளிர் அணியையும்  வளர்த்து வருகிறார்.    அதுபோல் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் தீவிர ஆதரவாளராக இருக்கும் வளர்மதி,  அமைச்சர் சீனிவாசனை மாமா என்றுதான் கூப்பிடுவார்.    அந்த அளவுக்கு அமைச்சர் சீனி மேல் விசுவாசமாக இருந்து வருகிறார்.

 

sr

 

 இந்த நிலையில்தான்  திண்டுக்கல்லில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஏ.பி.ஆர்.ஓ.வாக பணிபுரிந்து வந்த வளர்மதியின் மகன் அருண்குமார் கஞ்சா பிசினஸ் செய்து வந்ததாக கூறி   கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  அதைக் கண்டு மகளிர் அணிச் செயலாளர் வளர்மதி மனம் நொந்து போய் விட்டார்.    அதன் பின் தன் மகனை காப்பாற்றுவதற்காக இபிஎஸ், ஓபிஎஸ் வரைக்கும் போயும்  கூட  காப்பாற்ற முடியவில்லை. அதை  மனதில் வைத்து கொண்டு லோக்கலில் இருக்கும்  பொறுப்பில் உள்ள  
ர.ர.க்கள் வளர்மதியை மதிக்காமல் புறக்கணித்து வந்தனர்.  

 

v


 இந்த நிலையில்தான் ஆளுங்கட்சி சார்பில் நிலக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.   இந்த விழாவுக்கு வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பார்த்த வளர்மதியோ தன்னை வத்தலகுண்டில் உள்ள நகர செயலாளர் பீர்முகமது  உள்பட பொறுப்பில் உள்ள கட்சிகாரர்கள்  சிலர் என்னை மதிப்பதே இல்லை மாமா. நீங்கள் ஒதுக்கி கொடுக்க சொன்ன சலுகைகளையும்  கூட  கொடுப்பதில்லை.   அதுபோல் நேற்று கட்சிக்கு வந்த சின்னப் பையங்க  கூட என்னை மதிப்பதில்லை மாமா. இந்த கட்சியை வளர்க்க நானும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேனு உங்களுக்கே தெரியுமில்ல.  மாமா தற்பொழுது என் அரசியல் வளர்ச்சியை பொருக்க முடியாமல் தான் என் மகன்  மேல் பொய் வழக்கு  போட்டு சிக்க வைத்து விட்டனர்   என்று கூறி கதறி அழுது இருக்கிறார்.  அதை கேட்ட வனத்துறை அமைச்சர் சீனிவாசனும்   சரி விடும்மா  நான்  பேசிக் கொள்கிறேன். இதுக்கு போய் கண் கலங்கற என்றவாரே, வளர்மதிக்கு ஆறுதல் கூறி இருக்கிறார்.  இப்படி வத்தலக்குண்டு பகுதியில் உள்ள  பொறுப்பில் இருக்கும் சில  ர.ர.க்களை பற்றி அமைச்சர் சீனிவாசனிடம் மகளிர் அணி செயலாளர் வளர்மதி முறையிட்டு இருப்பதை கண்டு மாவட்டத்தில்  ர.ர.க்கள் மத்தியிலேயே பெரும்   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

தேனியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Chief Minister M.K. Stalin's campaign In Theni

தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் சுற்றப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் நாளை (புதன் கிழமை) தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதனையொட்டி தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

Chief Minister M.K. Stalin's campaign In Theni

இதில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு மதுரையில் இருந்து தேனி வருகிறார். தேனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்குகிறார். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க செல்லும் ஊர்களில் எல்லாம் காலை நேரத்தில் நடைபயிற்சி செய்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி தேனியிலும் அவர் நாளை காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மாலையில் லட்சுமிபுரத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக லட்சுமிபுரத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது ஏராளமான தொண்டர்கள் அமருவதற்காக பொதுக்கூட்ட திடல் தயார் செய்யும் பணிகள் கடந்த சில  நாட்களாக மும்முரமாக நடந்து வருகின்றது. பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் பிரம்மாண்ட கம்பங்கள் நடப்பட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. 

Chief Minister M.K. Stalin's campaign In Theni

இந்த பொதுக்கூட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 12 தொகுதிகளில் இருந்தும் கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என ஒரு லட்சம் பேரை திரட்ட இருக்கிறார்கள். அதற்கான பணியில் தொகுதி பொறுப்பாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்பட பொறுப்பாளர்களும் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.