Skip to main content

   இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல் 

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

 


போதைப் பொருள் கடத்தல் என்றாலே தமிழக கடல்வழியாக இலங்கை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதும், அதே போல தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் பல நாடுகளில் இருந்தும் இலங்கை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கடல் மார்க்கமாக தமிழக கடலோரக் கரைகளுக்கு கொண்டு வந்து கடத்தப்படுவதும் வழக்கமாகிவிட்டது. அதாவது போதை பொருள் மற்றும் தங்கம் கடத்தல்களின் மையமாக இலங்கை செயல்பட்டு வருகிறது. 

 

k

 

மீன்பிடி படகுகளில் இலங்கையிலிருந்தும், இலங்கையிருந்து இந்தியாவுக்கும் கடத்தல் நடக்கிறது. அதாவது விடுதலைப்புலிகள் கடலில் இருந்து ஒதுங்கிய பிறகே இந்த கடல்வழிக் கடத்தல்கள் அதிகரித்துள்ளது. அதற்கு முன்பு விமானங்கள் மூலம் பெண்களையே கடத்தல்களுக்கு அதிகம் பயன்படுத்தி வந்தனர். இந்தியாவில் இருந்து சில பொருட்களை கொண்டு போய் இலங்கையில் கொடுத்துவிட்டு பிறகு அங்கிருந்து இந்தியா திரும்பும் பெண்களை தங்கம் கடத்தலுக்கு புரோக்கர்கள் பயன்படுத்திக் கொண்டனர். விடுதலைப் புலிகள் கடலில் இருந்து ஒதுங்கிய பிறகு கடல்வழிக்கடத்தல்களே அதிகரித்துள்ளது. 


வேதாரண்யம் அருகே அ.தி.மு.க புள்ளியின் மகன் விற்க கஞ்சாவுக்கு ரூ. 3 கோடி வரை பாக்கி இருந்ததால் ஒரு இலங்கை வாலிபரை ஒன்றரை ஆண்டுகள் ஒரு வீட்டுக்குள்ளேயே பூட்டி சிறை வைத்திருந்தனர். அதனை கண்டறிந்த கடலோர புலனாய்வு நுன்னறிவு பிரிவினர் கண்டறிந்து கடலோர காவல் போலிசார் கடந்த மாதம் மீட்டனர். ஆனாலும் கஞ்சா கடத்தல்கள் நிற்கவில்லை.

 

இந்த நிலையில் தான் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற, ரூ 5 லட்சம் மதிப்புள்ள,  50 கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


திருச்சியில் இருந்து தஞ்சாவூர் மாவட்டக் கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, கடலோரக் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல்படை ஆய்வாளர் சுபா தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகரன், தலைமைக் காவலர் வெற்றிச்செல்வன், காவலர்கள் பகத்சிங், கோபால் ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

 

அப்போது, சேதுபாவாசத்திரம் அருகே உள்ள பிள்ளையார்திடல் பழைய சோதனைச் சாவடி அருகே, பட்டுக்கோட்டையில் இருந்து கட்டுமாவடி நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசுக் காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அந்த காரில் ரூ 5 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 

 

இதையடுத்து அந்த காரை பறிமுதல் செய்த கடலோரக் காவல்துறையினர், காரில் இருந்த மதுரை எல்லீஸ் நகர் சேகர் (வயது 59), புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கலந்தர்கனி (வயது 30), இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (வயது 45) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
            

சார்ந்த செய்திகள்

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.