Skip to main content

ஒரு நடிகையைக்கூட தொட்டதில்லை: ஸ்ரீரெட்டி புகார் குறித்து டி.ஆர். பதில்

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

 

 

t rajendar interview

 

 

ஒரு கதாநாயகியைக் கூட தொட்டு நடித்ததில்லை என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ள புகார் குறித்து இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
 

 

 

சினிமாவில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி. முதலில் தெலுங்கு இயக்குநர்கள், நடிகர்கள் மீது குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தெலுங்கில் இருந்து தமிழ்நாடு பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி, பிரபல இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்ததாக நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது தற்போது பாலியல் புகார் அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர்,
 

சினிமாத்துறையில் நல்லவர்களும் உள்ளனர், சில மோசமானவர்களும் உள்ளனர். பாலியல் புகார் கூறுவது ஸ்ரீரெட்டியின் உரிமை. அந்த புகார்கள் குறித்து புகாருக்கு ஆளானவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். 
 

 

 

நான் சினிமாவில் 1979-80ல் என்ட்ரி ஆகினேன். ஒரு கதாநாயகியைக் கூட தொட்டு நடித்ததில்லை. நடிகைகளுக்கு டயலாக் சொல்லிக்கொடுக்கும்போதுகூட தொட்டு சொல்லிக்கொடுத்தது கிடையாது. நான் தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்திருக்கிறேன். என் மேல எந்த கிசுகிசுவும் வந்தது இல்லை.


புகார் சொல்லுவது உரிமை. புகாருக்கு ஆளானவர்கள் பதில் சொல்ல சொல்லுங்கள். அவர்களுக்கு வாய் இல்லையா? அவர்களுக்கு மைக் இல்லையா? என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை அவர்களிடம் கேளுங்கள் என்றார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலீஸார் வழக்குப் பதிவு: விரைவில் கைது செய்யப்படுவாரா ஸ்ரீரெட்டி?

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

தெலுங்கு திரையுலகில் துணை நடிகையாக ஒருசில படங்களில் நடித்திருந்த நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக்கொண்டனர் என்று புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் சமூக வலைதளங்களில் புகாரளித்த லிஸ்ட்டில் தெலுங்கு திரையுலகின் உட்ச நட்சத்திரங்களும் இருந்தது. அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.
 

sri reddy

 

 

சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் உட்சநட்சத்திரமான பவன் கல்யாண், மூன்று திருமணம் செய்தவர், இவரால் பல பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள், அரசியலுக்கு சரியானவர் இல்லை என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

இதுபோல் தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குனர் ராகேஷ் ஆகியோர் மீதும் அவதூறு கூறினார். இதையடுத்து கராத்தே கல்யாணியும், ராகேசும் சைபர் கிரைம் போலீசில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தனர். 

இதையடுத்து ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீரெட்டி விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது. 


 

Next Story

“அரசியல் காரணமாக சில்க் சுமிதாவை இழந்துவிட்டோம்”- ஸ்ரீரெட்டி வேதனை

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்கள் மீதும் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல்ரீதியாக பயன்படுத்திக்கொண்டனர் என்று புகார் தெரிவித்திருந்தார் ஸ்ரீரெட்டி. தற்போது இவர் மூன்று தமிழ் படங்களில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகின. அதனால் சென்னையில் வசித்து வருகிறார்.
 

sri reddy

 

 

தற்போது இவர் சில்க் சுமிதாவை பல முன்னணி ஹீரோக்கள் பயன்படுத்திக்கொண்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளார். 
 

“சில்க் சுமிதாவை முன்னணி கதாநாயகர்கள் உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர். அந்த சைக்கோக் களை எப்படி பட உலகின் சகாப்தம் என்று அழைக்க முடியும். சினிமா மற்றும் அரசியல் காரணமாக அவரை இழந்து விட்டோம். உங்களை மறக்கமாட்டோம் சில்க் சுமிதா” என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். எந்த நடிகர் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.