Skip to main content

திருச்சி முகாம் சிறையில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்!   

Published on 01/03/2022 | Edited on 01/03/2022

 

Sri Lankan Tamils ​​on hunger strike in Trichy camp jail!

 

திருச்சி முகாம் சிறையில் 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யக்கோரி 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

 

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் சிறையில் குற்ற வழக்கில் தொடர்புடைய இலங்கை, ரஷ்யா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், இலங்கை அகதிகள் 7 பேர் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தங்கள் மீது எந்தக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி 7வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர்.

 

நேற்று வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர். ஆனால், அதற்கு உடன்படாத நிலையில் அவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்