Skip to main content

விரட்டியடித்த இலங்கை கடற்படை... தமிழக மீனவர்கள் வேதனை!

Published on 18/07/2021 | Edited on 18/07/2021

 

Sri Lankan navy chases away ... Tamil Nadu fishermen in agony!

 

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை படையினர் விரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் இந்த சம்பவத்தில் இலங்கை கடற்படையினர் தங்கள் படகிலிருந்த வலைகளை வெட்டி சேதப்படுத்தி விரட்டியுடித்ததாக தமிழக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலால் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 30 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். 

 

எப்பொழுதுமே 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக நேற்று மட்டும் 236 அனுமதிச் சீட்டுகள் பெறப்பட்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்றார்கள். இந்நிலையில் கச்சத்தீவு அருகே 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததோடு தமிழக மீனவர்களின் வலைகளை வெட்டி சேதப்படுத்தியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு படத்திற்கும் 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலையுடன் கரை திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

அண்மையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன் தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை துறை, பால்வளத் துறை இணை அமைச்சராகப் பதவியேற்ற போது டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கையில், ”மோடி அரசு பதவியேற்ற பின் மீனவர்கள் மீதான தாக்குதல் ஜீரோ அளவில் குறைந்துள்ளது'' எனகூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.