திருச்சி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களில் 30க்கும் மேற்பட்டோர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் 11ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றுடன் 40வது நாளாக அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு, பொது மன்னிப்பு வழங்கி அனைவரையும் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
முதல்வர் படத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள்!
Advertisment