ADVERTISEMENT
சென்னையை அடுத்த மணலியில் இயங்கிவரும் பிரபல பாலியஸ்டர் தயாரிப்பு நிறுவனமான எஸ்.ஆர்.எஃப் பல்வேறு கிளைகளையும், 3000-க்கு அதிகமான ஊழியர்களையும் கொண்டது. சமீபத்தில் மணலி தொழிற்சாலையின் ஐ.ஒய்.பி உற்பத்தி பிரிவை மூடுவதாக அறிவித்த எஸ்.ஆர்.எஃப் நிர்வாகம் அதில் பணிபுரிந்த 126 ஊழியர்களை வெளியேற்றியது.
ADVERTISEMENT
இந்நிலையில், எஸ்.ஆர்.எஃப் நிர்வாகம் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், அரசிடம் முறையான அனுமதி பெறாமல் ஐ.ஒய்.பி. பிரிவு மூடப்பட்டதாகவும், திடீர் வேலையிழப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தங்கள் குடும்பங்கள் தவிப்பதாகவும் தெரிவிக்கும் தொழிலாளர்கள், இன்று (17.12.2020) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகே எஸ்.ஆர்.எஃப் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Show comments