Skip to main content

1-ஆம் வகுப்பு மாணவியை கரண்டியால் சரமாரியாக தாக்கிய டியூசன் ஆசிரியர் கைது!

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

குமரி மாவட்டம் குளச்சல் பெத்தேல்புரத்தை சேர்ந்த வர்க்கீஸ், தனது மனைவி ஞானத்தாய் (33) மகள் ஐஸ்வர்யா (5) ஆகியோருடன், அதே பகுதியில் ஜெசிமோள் (46) என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். ஜெசிமோளும், ஞனத்தாயும் தோழிகள். இதில் ஜெசிமோள் வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார்.
 

இந்த நிலையில் அங்குள்ள தனியார் பள்ளியில் ஞனத்தாயின் மகள் ஐஸ்வர்யா 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இவள் கணிதம் பாடத்தை தவிர மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்து நன்றாக படிக்கும் மாணவி. இருப்பினும் கணிதம் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் ஐஸ்வர்யா எடுக்க வேண்டுமென கருதிய தாயார் ஞானத்தாயின் தனது தோழியான ஜெசிமோளிடம் டியூசனுக்கு அனுப்பினாள்.
 

தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருவதால், அதில் மாணவி ஐஸ்வர்யா கணிதத்தில் 100 மதிப்பெண் எடுக்க ஆசிரியை ஜெசிமோள் இரவு பகலாக படிக்க மாணவி ஐஸ்வர்யாவை கஷ்டப்படுத்தி வந்தாள். இதனால் மனச்சோர்வு அடைந்த ஐஸ்வர்யா சரியான முறையில் படிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை சமையல் செய்யும் கரண்டியால் மாணவியின் முதுகு கைவிரல்களில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

Spoon the 1st grade student  Deusan teacher arrested for assault


இதில் காயம் பலமாக இருந்ததால் மாணவியை அன்று வீட்டுக்கு விடாமல் தன்னுடைய வீட்டில் தங்க வைத்து அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அங்கியிருந்தே மாணவியை பள்ளிக்கு அனுப்பினார் ஆசிரியை. அன்று பள்ளிக்கு சென்ற மாணவி தேர்வு எழுத முடியாமல் வலியால் அழுது கொண்டியிருந்தாள். இதை பார்த்த ஆசிரியர் மாணவியிடம் விசாரித்த போது டியூசன் ஆசிரியை தாக்கியதை கூறினாள்.


இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு வரவழைத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடமும் புகார் செய்தனர். பின்னர் குளச்சல் அனைத்து மகளிர், காவல்நிலையத்திலும் டியூசன் ஆசிரியை ஜெசிமோள் மீது தாயார் ஞானத்தாய் புகார் கொடுத்து மாணவியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது சம்மந்தமாக மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஜெசிமோள் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை அவரை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.