Skip to main content

மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்! மக்களே உஷார்!

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
aarch


திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் மீன் மார்க்கெட் நகரின் மைய பகுதியான சோலையஹால் தியேட்டர் எதிரே செயல்பட்டு வருகிறது. இப்படி செயல்படக்கூடிய மீன் மார்க்கெட்டுக்கு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, சென்னை உள்பட சில இடங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கழமைகளில் பெரும் அளவில் மீன்கள் வருகிறது.

இப்படி வரக்கூடிய மீன்களை தாடிக்கொம்பு, கோவிலூர், கோபால்பட்டி, கன்னிவாடி, செட்டிநாயக்கன்பட்டி, செம்பட்டி உள்பட சில பகுதிகளில் உள்ள மீன் வியாபாரிகளும் லோக்கலில் உள்ள மீன் வியாபாரிகளும் வந்து வாங்கி சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

 

 

அதுபோல், நகரில் உள்ள மக்களும் இரவு நேரங்களில் இந்த மீன் மார்க்கெட்டுக்கு மீன் வாங்க வரும்போது வியாபாரிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய விலைக்கே பொது மக்களுக்கும் மீன் கடைக்காரர்கள் விற்பனை செய்கிறார்கள். அதிலும் ஐந்து கிலோ அல்லது அதற்கு மேல் வாங்கினால் தான் வியாபாரிகள் விலைக்கு மீன் கொடுக்கிறார்கள் அப்படி இருந்தும் கூட பெரும்பாலான மக்கள் இரவுகளில் வந்து வாங்கி செல்கிறார்கள்.

ஆனால் மீன் மார்க்கெட்டில் உள்ள பல கடைகாரர்களோ ஐஸ் பாக்ஸ் மூலம் இருப்பு வைக்கப்பட்ட பழைய மீன்களை புதிதாக வந்தது போல் தரையில் கொட்டி விட்டு விலை நிர்ணயம் செய்து விடுகிறார்கள். இப்படிபட்ட மீன்களை மீன் வியாபாரிகளே கூட சரி வர வாங்காமல், ரீச்சர் வண்டிகளிலிருந்து வரக் கூடிய மீன்களை தான் பெரும்பாலான வியாபாரிகள் வாங்குகிறார்கள். அப்படிபட்ட மீன்களை கூட மக்கள் வாங்க நினைத்தாலும் பத்துகிலோ, இருபது கிலோ தான் போடுவோம் என கடைக்காரர்கள் சொல்லி விடுகிறார்கள். அதனால் இருக்கிற மீன்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு வரும் போது சுகாதாரம் இல்லாமல் கிழே கொட்டி விற்கப்படும் மீன்களை ஐந்து கிலோவுக்கு குறைவு இல்லாமல் வாங்கி செல்கிறார்கள். இப்படி கெட்டுப் போன பழைய மீன்களாகவே பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
  fish


கடந்த சனிக்கிழமை இரவு என்னுடன் சேர்த்து ஐந்து பெண்கள் மீன் மார்க்கெட்டுக்கு சென்று ஒரு கிலோ 120 வீதம் பாறை மீனை ஆளுக்கு ஐந்து கிலோ வாங்கி வந்து, அறுத்து பார்த்தபோது புது மீனின் தன்மையே இல்லாமல் நொந்து போய் கெட்டுப் போன வாடை அடித்தது. அப்படி இருந்தும் நல்லா கழுவி தான் மீன் குழம்பு வச்சும் கூட குழம்பு சலசலன்னு போச்சு மீனும் நல்லா இல்லாமல் இருந்தது.

அப்படி இருந்தும் சாப்பிட்டதால உடனே வயிற்று போக்கு ஏற்பட்டு குடும்பமே இரண்டு நாள படுத்த படுக்கையா போட்டு விட்டது. இப்படி பழைய கெட்டுப் போன மீனை தான் மார்க்கெட்டில் போட்டு விற்பனை செய்து கொண்டு மக்களை ஏமாற்றி வருவதுடன் மட்டும் மல்லாமல் உடல் நலத்தையும் கெடுத்து வருகிறார்கள் என்றார் மீன் வாங்கி வந்த பெண்ணான அமுதா.
 

anitha
  நகர் நல அலுவலர் அனிதா


ஆனால் மாநகராட்சியில் உள்ள நகர் நல அலுவலர் அனிதா, நகரின் தூய்மைக்காக அதிரடி நடவடிக்கை எடுத்து துப்புரவு தொழிலாளர்கள் மூலம் வீடுகள் தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்க சொல்லி அதை தனி தனியாக பிரித்து உரம் எடுக்கும் முயற்சிலிலும் நகரில் குப்பைகள் இல்லாத அளவிற்கு உடனடியாக சுத்தப்படுத்தி நகரை குப்பை இல்லா நகரமாக வைத்து கொண்டு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல பெயர் எடுத்து வருகிறார். அப்படி இருக்கும் போது மாநகராட்சி கட்டுப்பாட்டில் மீன் கடைகளை வைத்து கொண்டு கெட்டுப் போன மீன்களை விற்கும் மீன் கடைக்காரர்கள் மீது மாநகரத்தின் நகர் நல அலுவலரான அனிதா அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர மக்கள் வலியுறுத்தியும் வருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

திண்டுக்கல் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு கேட்ட உடன் பிறப்புகள்!

Published on 13/04/2024 | Edited on 14/04/2024
dmk who voted street by street for the cpm

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ்டிபி கட்சியில் முகமது முபாரக், பா.ம.க.வில் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் போட்டி போடுகிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியினர் மக்களை சந்தித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை ஆதரவு திரட்டியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாநகரில் உள்ள மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் கிழக்கு பகுதிசெயலாளரான ராஜேந்திரகுமார், வடக்கு பகுதி செயலாளரான ஜானகிராமன், மேற்கு பகுதி செயலாளரான அக்கு, தெற்கு பகுதி செயலாளரான சந்திரசேகர் ஆகிய கட்சி பொறுப்பாளர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து வார்டு பொறுப்பாளர்களுடன் கவுன்சிலர்களையும் அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாநகரில் உள்ள 48வார்டுகளிலும் உள்ள பொதுமக்களை வீதி வீதியாக சந்தித்து சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்கள்.

dmk who voted street by street for the cpm

இதில் 17வதுவார்டு மாநகர கவுன்சிலரான வெங்கடேஷ் கட்சி பொறுப்பாளர்களுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பிட் நோட்டீஸ்களை கொடுத்து அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் இருகரம் கூப்பி ஓட்டு கேட்டார். அதேபோல் மற்ற பகுதிகளிலும் மேயர், துணை மேயர் பகுதிச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் திண்டுக்கல் மாநகரில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கடந்த மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களையும், சலுகைகளையும் கூறி வரக்கூடிய தேர்தலில்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பிட் நோட்டீஸ்களையும் கொடுத்து ஆதரவு திரட்டினார்கள்.

இப்படி திடீரென ஒரே நேரத்தில் திண்டுக்கல் மாநகரில் அனைத்து வார்டுகளிலும் உபிக்கள் தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்கு கேட்டது தேர்தல் களத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.