Skip to main content

பிரித்து எரியப்பட்ட கடைகள்-கண்ணீர் விட்ட பெண்கள்!!

Published on 20/09/2018 | Edited on 20/09/2018

புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபம் வரும்  நவம்பர் மாதம் 14ந்தேதி தொடங்கப்படவுள்ளது. இதற்கான பூர்வாங்க வேலைக்காக அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ராஜகோபுரம் எதிரே கோயில் இடத்தில் பிளாஸ்டிக் கூரை போட்டு 50க்கும் மேற்பட்டோர் பூ, மாலை, தோங்காய், கற்பூரம் விற்கும் கடைகள், பொம்மைகள் விற்பது, வளையல் விற்கும் வியாபாரம் செய்துவந்தனர்.

 

shop

 

இந்த கடைகளை காலி செய்ய வேண்டும்மென கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. அவர்கள் கடைகளை காலி செய்யவில்லையென இன்று செப்டம்பர் 20ந்தேதி காலை 11 மணியளவில் 50க்கும் அதிகமான போலிஸார் ராஜகோபுரம் முன் குவிக்கப்பட்டு கடைகளை காலி செய்யலன்னா ஜேசிபி வச்சி இடிச்சி வாரிப்போட்டும் போய் வெளியே கொட்டிடுவோம் என மிரட்டினர்.

 


கடை வைத்துள்ள பெண்கள், 2 நாள் பொருத்துக்குங்க காலி செய்யறோம் என்றனர். கோயிலோட இடத்தில் ரோட்ல தானே கடை வச்சியிருக்கிங்க, காலி பண்ணச்சொன்னா காலி செய்துடனும், அதைவிட்டுட்டு சட்டம் பேசறிங்க என எகிறினர். சும்மா வச்சியில்லைங்க, தினமும் சாயந்திரம்மானா கடைக்கு 100 ரூபாய்ன்னு கோயில் ஆளுங்க வசூல் பண்ணாங்க. அதுக்கு பில் கிடையாது. இன்னைக்கு வந்து ஏதோ யோக்கியனுங்க மாதிரி கடையை பிரிச்சி தள்ளறாங்க என்றதும் அங்கிருந்த இணை ஆணையர் ஞானசேகரன் அந்த இடத்தில் இருந்து தூரச்சென்றார்.

 

shop

 

போலிஸ் துணையோடு கடையை கோயில் ஆட்கள் பிரித்து தள்ள நாங்க சாலை மறியல் செய்யறோம் என 10 பெண்கள் கிளம்பினர். சாலை மறியல்ன்னு உட்கார்ந்திங்க. 15 நாள் உள்ள தூக்கி வச்சிடுவோம் ஜாக்கிரதை என போலிஸ் மிரட்ட அப்பெண்கள் பின்வாங்கினர். இறுதியில் மதியம் 3 மணியளவில் ராஜகோபுரம் முன்பிருந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த 50 குடும்பத்தினருக்கும் இன்னும் 3 மாதத்துக்கு அங்கு கடை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 3 மாசம் எப்படி குடும்பம் நடத்தறதுன்னு தெரியல என கண்ணீர் விட்டார்கள் அங்கு கடை வைத்திருந்தவர்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது