Skip to main content

வேகமாக நிரம்பிவரும் வீராணம் ஏரி... விவசாயிகள் மகிழ்ச்சி!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி உள்ளது. இதன் முழு கொள்ளளவு 47.50  அடியாகும் இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி வட்ட பகுதிகளில் 48 ஆயிரத்து 850 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

 

The speedy filled veeranam lake ... farmers are happy!


மேலும் வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.  கடந்த ஆகஸ்ட் மாதம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வீராணம் நிரப்பப்பட்டது. இதனால் தொடர்ந்து சென்னைக்கு விநாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கடும் வெயில் மற்றும் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து 39 அடியாக இருந்தது. இதனால் சென்னைக்கு வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் அனுப்பினர். 

இந்தநிலையில் கர்நாடக பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து அங்கிருந்த உபரிநீர் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது இதனால் மேட்டூர் அணை கிடுகிடுவென நிரம்பி 116 அடி முழுகொள்ளவை எட்டியது. இதனைத்தொடர்ந்து கடந்த 13ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார். இதனைத்தொடர்ந்து கல்லணையிலிருந்து கடந்த 17ஆம் தேதி தமிழக அமைச்சர்கள் கொள்ளிடம் மற்றும் காவிரியில் பாசனத்திற்கு தண்ணீரை திறந்தனர். கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் கும்பகோணம் அருகே உள்ள கீழணைக்கு வந்து சேர்ந்தது.  

 

The speedy filled veeranam lake ... farmers are happy!


இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் வீராணம் ஏரியை நிரப்பும் நோக்கோடு கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரை வீராணம் ஏரிக்கு திறந்து திறந்து விட்டனர். இந்த தண்ணீர் வியாழக்கிழமை காலை வீராணம் ஏரியை அடைந்தது. இந்த தண்ணீரை வழிநெடுகிலும் விவசாய சங்கத்தினர். விவசாயிகள் மலர்த்தூவி காவிரி நீரை வரவேற்றனர். இந்தநிலையில் கீழணையில் இருந்து வீராணம் ஏரியில் இருந்து அனுப்பப்பட்ட தண்ணீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு வெள்ளிக்கிழமையென்று 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. வீராணம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது இதனால் கடலூர் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் வீராணம் ஏரியிலிருந்து தொடர்ந்து  சென்னைக்கு தண்ணீர் அனுப்பிட முடிவு செய்துள்ளனர். கீழணையில் இருந்து  வடவாறு வழியாக தண்ணீர் திறந்து விட்டதால் கீழணை பகுதியில் உள்ள மீனவர்கள் மீன் பிடித்து மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.