சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 120 படுக்கைகள் கொண்ட கரோனா நோயாளிகளுக்கான வார்டு திறக்கப்பட்டது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிறப்பு வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திறந்துவைத்து பார்வையிட்டனர்.