இன்று(27.08.2021) சென்னை சைதாபேட்டையில் ஆசிரியர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் துவங்கி வைக்கப்பட்டது. இந்த கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலரும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக பங்கேற்றனர். இதனை இன்று காலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகர ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர்துவக்கி வைத்தனர்.