Skip to main content

வாகன ஓட்டிகளிடம் மிரட்டி வசூல் வேட்டை; சிறப்பு எஸ்.ஐ. அதிரடி இடமாற்றம்!

Published on 13/03/2022 | Edited on 13/03/2022

 

Intimidation collection hunt for motorists; Special SI. Action Swap!

 

நாமக்கல்லில், வாகன ஓட்டிகளிடம் கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் வசூல் வேட்டை நடத்திய சிறப்பு எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உள்கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு காவல்நிலையங்களில் சிறப்பு எஸ்.ஐ. ஆக பணியாற்றியவர் பழனிசாமி. இவர், வாகனத் தணிக்கையின்போது கட்டாய வசூலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. அதன்பேரில் அவரை, கொல்லிமலையில் உள்ள வாழவந்திநாடு காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டர். 

 

இந்த நிலையில், மார்ச் 10- ஆம் தேதி சேந்தமங்கலம் காவல்நிலையத்திற்கு எஸ்.ஐ. பழனிசாமி இடமாறுதலில் வந்துள்ளார். அப்போது அவர் கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி மாலைப்பாதை நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டு, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ஓட்டிகளிடம் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க 100 ரூபாய் வீதம் கட்டாயப்படுத்தி வசூலித்துள்ளார். 

 

பணம் கொடுக்காத வாகன ஓட்டிகளை அங்கிருந்து செல்ல விடாமல் வாகனத்தின் சாவியைப் பிடுங்கி வைத்துக்கொண்டு தகராறு செய்துள்ளார். பலரை கண்ணியக் குறைவாகவும் திட்டியுள்ளார். இதை வாகன ஓட்டிகள் செல்போன் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ பதிவுகள், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. 

 

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர், பழனிசாமியை மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். வசூல் வேட்டை புகாரின்பேரில் ஒரே எஸ்.ஐ. குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக இடமாறுதலுக்கு உள்ளான சம்பவம் நாமக்கல் மாவட்ட காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.