அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பு அதிகாரிகள் போராட்டம்

Special officers of the University are Struggling in the Annamalai University campus

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 600க்கும் மேற்பட்ட சிறப்பு அதிகாரிகள் மற்றும் உதவி சிறப்பு அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் பணிக்குறைப்பு செய்து இவர்களது சம்பளத்தையும் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு அதிகாரிகள் காவல்துறையின் தடையை மீறி துணைவேந்தர் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இவர்களது சம்பளக் குறைப்பைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Officers
இதையும் படியுங்கள்
Subscribe