Skip to main content

மாறுவேடத்தில் சென்ற தனிப்படை! - சிக்கிய சிலை திருடர்கள்

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

A special force that went in disguise! Trapped Idol Thieves

 

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (36). இவர், பழமையான மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலையை ரூ. 2 கோடிக்கு விற்க முயற்சி செய்வதாகச் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் சைலேஸ் குமார் யாதவ்க்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவு உயர் அதிகாரி தினகரன், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் சிலை கடத்தல் கும்பலுக்குச் சந்தேகம் ஏற்படாத வண்ணம் சிலையை மீட்க ஒரு செயல் திட்டம் வகுத்தனர்.

 

இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜா தலைமையில், ஆய்வாளர்கள் ரவீந்திரன், சத்தியபிரபா, உதவி ஆய்வாளர்கள் ராஜேஸ், மதன், ராமசாமி, தலைமைக் காவலர்கள் சக்திவேல் மற்றும் ரீகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படையினரை சிலை வாங்கும் நபர்களைப் போல புரோக்கர் பாலமுருகனை அணுகச் செய்தனர். 

 

புரோக்கர் பாலமுருகனின் நம்பிக்கையைப் பெற தனிப்படையினருக்கு பத்து நாட்களுக்கு மேல் ஆனது. இறுதியாக பாலமுருகன், அச்சிலையினை தனிப்படையினருக்குக் காட்ட ஒப்புக்கொண்டார். தனிப்படை அதிகாரிகள் சத்தியபிரியா மற்றும் ராஜேஸ் ஆகியோர் பாலமுருகனை காரியாபட்டியில் சந்தித்துப் பேசியபோது, அந்த மாணிக்கவாசகர் சிலையின் மதிப்பாக இரண்டு கோடி முடிவு செய்யப்பட்டது. 

 

A special force that went in disguise! Trapped Idol Thieves

 

மேலும், தனிப்படையினர் பாலமுருகனிடம் பேச்சுக் கொடுத்தபோது, அவரது நண்பர் சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் மேலும் ஒரு விநாயகர் சிலை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தனிப்படையினர், அந்த சிலையையும் வாங்க ஆர்வம் காட்டுவதாகவும், அதன் காரணமாக அவர்களைச் சென்னைக்கு அழைத்துச் சென்று அந்த சிலையையும் வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர். முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த பாலமுருகன் கடும் முயற்சிகளுக்குப் பின் சென்னை வர ஒப்புக்கொண்டார்.

 

அத்திட்டத்தின்படி இன்று காலை தனிப்படை உதவி ஆய்வாளர்கள் ராஜேஸ் மற்றும் ராமசாமி ஆகியோர் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தனர். அப்போது பாலமுருகனும் அவரது நண்பர்களுமான அம்பத்தூரைச் சேர்ந்த பிரபாகரன் (40), விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (34) ஆகியோரும் ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையோடு அவ்விடத்திற்கு வந்தனர். பின்னர் மேற்கூறிய மூவரும் தனிப்படையினரும் ஒரு மறைவான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்திய போது, அந்த விநாயகர் சிலைக்கு ரூபாய் 4 கோடி என மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. 

 

அப்போது காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜா தனது தனிப்படை காவலர்களுடன் வந்து அம்மூன்று நபர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தார். மேலும், அவர்களிடமிருந்து மாணிக்க வாசகர் மற்றும் விநாயகர் சிலைகளையும் மீட்டார். இது தொடர்பாகப் பிடிபட்ட மூவரிடத்திலும் நடத்தப்பட்ட விசாரணையில், அவ்விரு சிலைகளும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செய்யாறு அருகே உள்ள ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் இவ்விரு சிலைகளும் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூபாய் 2 கோடிக்கு மேல் இருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.