Skip to main content

போக்சோ வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றம்! -சேலத்தில் விரைவில் அமைகிறது!!

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை (போக்சோ சட்டம்) விசாரிக்க நாடு முழுவதும் 389 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. சேலத்தில் விரைவில் புதிய போக்சோ நீதிமன்றம் செயல்படுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகின்றன. பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் என வரையறுக்கப்படுகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான குற்றங்கள் பெருகி வருகின்றன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் புரிந்தவர்கள் மீது போக்சோ எனும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த சட்டம், கடந்த 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

 

 Special court to hear Pokso cases -Setting up soon in Salem !!

 

இந்த சட்டத்தின் படி, சிறுமிகளை உள்நோக்கத்துடன் தொடுவது, சீண்டுவதும் கூட குற்றம் என்று பிரிவுகள் 7 மற்றும் 8 கூறுகிறது. இதுபோன்ற குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம்.

நாடு முழுவதும், 1.66 லட்சம் போக்சோ வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இதையடுத்து, போக்சோ வழக்குகளில் விரைவான விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, எங்கெங்கெல்லாம் 100 மற்றும் அதற்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் தலா ஒரு சிறப்பு போக்சோ நீதிமன்றம் துவக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் தேவையான அளவுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை துவக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

நாடு முழுவதும் முதல்கட்டமாக 389 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னை, கடலூர், கோவை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர், நாகை, சேலம், சிவகங்கை ஆகிய 16 மாவட்டங்களில் இச்சிறப்பு நீதிமன்றம் துவக்கப்பட உள்ளது.

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், மகளிர் நீதிமன்றத்தின் மேல் மாடியில் உள்ள ஓர் அறையில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்படுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. வரும் ஜனவரி மாத இறுதிக்குள் இந்த சிறப்பு நீதிமன்றம் முழுமயை£க செயல்படும் எனத்தெரிகிறது.

போக்சோ நீதிமன்றங்களில் அரசுத்தரப்பில் பெண் வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.