Special Buses Movement' - More than 1.5 lakh people travel

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் (09.10.2024) முதல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

அதோடு தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்கப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதே சமயம் இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையை (ஆயுத பூஜை) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தின் படி நேற்று (10/10/2024) நள்ளிரவு 12.00 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குத் தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகள் உடன் கூடுதலாக ஆயிரத்து 28 பேருந்துகளும் என நேற்றைய தினம் மொத்தம் 3 ஆயிரத்து 120 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 240 பயணிகள் பயணித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.