Skip to main content

'குடியரசு தின' விழாவில் பங்கேற்றேன்... தனபால் போட்ட பகீர் டுவிட்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

நாட்டின் 73-வது சுதந்திர தினம் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியைக் கொடியை ஏற்றி வைத்தார். இதே போன்று அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதேபோல் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் பழனிசாமி கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பிரிவுகளின் விருதுகளும், பரிசுகளும் வழங்கி முதலமைச்சர் பழனிசாமி சிறப்பித்தார்.
 

b



இந்நிலையில் சபாநாயகர் தனபால் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தவறான பதிவு ஒன்றை வெளியிட்டு தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். அதாவது, 'சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழக சட்டமன்ற தலைவர் தனபால் கலந்து கொண்டார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், சபாநாயகர் ஏன் குடியரசு தினத்தில் கலந்துகொண்டார்? என்று இணையதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெ.வுக்கு கிடைத்த வெற்றி; தனபால் சொன்னதன் அர்த்தம் - பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் விளக்கம்

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

SP Lakshmanan Interview

 

மாமன்னன் படம் பேசும் அரசியல் குறித்து தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன்.

 

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் மாமன்னன் படத்தை இப்போது எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. மாரி செல்வராஜுக்கு ஒரு உணர்வு இருந்திருக்கிறது. அது அவர் கடந்து வந்த பாதையாக இருக்கலாம், அவர் கேள்விப்பட்ட விஷயமாக இருக்கலாம். முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதை தான் இது என்கிற பேச்சு படம் வெளிவருவதற்கு முன்பே இருந்தது. இந்தக் கதை தன்னைப் பற்றியதுதான் என்றால் அந்தப் பெருமை ஜெயலலிதாவையே சேரும் என்று தனபால் சொல்லியிருக்கிறார்.

 

இது ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த தனபாலை அனைவரும் மரியாதை செலுத்தும் சபாநாயகர் என்கிற இடத்தில் அமர வைத்து அழகு பார்த்தவர் ஆணவக்காரர் என்று அனைவராலும் சொல்லப்பட்ட ஜெயலலிதா. ஜெயலலிதா எப்போதும் தன்னுடைய சாதியை முன்னிறுத்த வேண்டும் என்று நினைத்தவரல்ல. பட்டியலினத்தில் இருந்து ஒருவர் வென்றால், அவரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகத் தான் ஆக்க வேண்டும் என்று எழுதப்படாத விதி இருந்தபோது, முதன்முதலில் தனபாலை கூட்டுறவுத்துறை அமைச்சராக ஆக்கினார் ஜெயலலிதா.

 

எப்போதும் ஆச்சரியங்களை வழங்குபவர் தான் ஜெயலலிதா. தனபாலை அனைவரையும் வணங்க வைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதைச் செய்தார். ஜெயக்குமார் போல் வாய்த்துடுக்காக பேசாமல், இந்தப் பெருமை ஜெயலலிதாவையே சாரும் என்று தனபால் தெரிவித்திருக்கிறார். அதிமுககாரர் பற்றிய படத்தை நான் ஏன் எடுக்க வேண்டும் என்று உதயநிதி நினைத்திருந்தால் இந்தப் படம் வந்திருக்காது. ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை. இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

வலியைக் கடந்து வந்த அனைவருக்குமான படம் மாமன்னன். இந்தப் படம் குறித்த ஜெயக்குமாரின் விமர்சனம் எனக்கு உண்மையில் வருத்தத்தை அளித்தது. சில நேரங்களில் அரசியலை ஓரங்கட்டிவிட்டு கொஞ்சம் பெருந்தன்மையாக இருங்கள். ஜெயலலிதா மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் சாதியப் பார்வையோடு நடந்துகொண்டதில்லை. திருச்சி என்கிற பொது நாடாளுமன்றத் தொகுதியில் தலித் எழில்மலையை நிற்க வைத்து அவர் வெற்றிபெறச் செய்தார். இதுபோன்ற விஷயங்களுக்காக அவரை புரட்சித்தலைவி என்று நிச்சயமாக அழைக்கலாம்.

 

 

Next Story

கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டமா?- சபாநாயகர் நேரில் ஆய்வு!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

tamilnadu assembly speaker dhanapal inspection

 

சென்னை சேப்பாக்கத்தில்  கலைவாணர் அரங்கில் பேரவை கூட்டத்தை நடத்துவது பற்றி தமிழக சட்டப்பேரவை சபாநாயர் தனபால் நேரில் ஆய்வு செய்தார். சபாநாயகருடன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆய்வில் கலந்துக்கொண்டனர். 

 

கரோனா அச்சறுத்தலால் இடநெருக்கடி காரணமாக மாற்று இடத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 24- ஆம் தேதிக்குள் தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என்பதால் சபாநாயகர் இத்தகைய ஆய்வை மேற்கொண்டதாக தகவல் கூறுகின்றன.

 

ஆய்வு செய்த பின் செய்தியாளர்க்ளுக்கு பேட்டியளித்த சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், "சட்டப்பேரவை கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை" என்றார்.