டெல்லியில் இன்று (31/07/2021) காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழ்நாடுசட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்தார். அப்போது, தமிழ்நாடுசட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் படத்திறப்பு விழா அழைப்பிதழைக் குடியரசுத் தலைவருக்கு சபாநாயகர் அப்பாவு வழங்கினார். அத்துடன், 'The Dravidian Model' என்ற புத்தகத்தையும் குடியரசுத் தலைவரிடம் வழங்கினார்.