பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த எஸ்.பி.பி-க்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அதன்காரணமாக மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (25.09.2020) மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்.பி.பி. காலமானார். பொதுமக்கள் அஞசலிக்காக அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டது.
திருவள்ளூர் அருகே உள்ள தாமரைப்பாக்கத்தில் அவருக்கும் சொந்தமான இடத்தில் அவரின் உடல் இன்று (26.09.2020) நல்லடக்கம் செய்யப்படும் என்று அவர் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இதற்காக நேற்று இரவு அவரது உடல் தாமரைப்பாக்கத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது வழிநெடுக்க மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதில் சிலர் ஆங்காங்கே பட்டசுகளும் வெடித்தனர். மேலும் ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அவரது உடல் எடுத்துசெல்லப்பட்ட வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர். அவருக்கு இசையால் அஞ்சலி செலுத்தும் வகையில் நாதஸ்வர கலைஞர் ஒருவர் நாதஸ்வரமும் வாசித்தார்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/spb-t-5_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/spb-t-6_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/spb-t-4_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/spb-t-2_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/spb-t-3_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/spb-t-1_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-09/spb-t_0.jpg)