Skip to main content

உலக சிட்டுக் குருவிகள் தினம்; சிட்டுக் குருவிகள் பராமரிப்பை இயக்கமாக்கும் புதுச்சேரி இயற்கை ஆர்வலர்! 

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

 

நமது உயிர்ச் சூழலில் உயிரியல் பல்லுயிர் தன்மையின் அதிமுக்கியத்துவத்தை உணர்த்த மார்ச் 20 அன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுதிறது. உலகம் முழுவதும் இன்று சிட்டுகுருவிகள் தினம் விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரி நகரச் சூழலில் சிட்டுக்குருவிகளைப் பாதுகாத்து சத்தமின்றி சாதித்திருக்கிறார் புதுச்சேரி, கொசப்பாளையத்தைச் சேர்ந்த அருண். 

 

புதுச்சேரியில் உள்ள ஒரு சிறிய தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றும் இவர், தனது மாத வருவாயில் பெரும்பகுதியைச் சிட்டுக்குருவிகளின் கூண்டுகளுக்காக செலவிடுகிறார். கடந்த 8 ஆண்டுகளில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் இதுவரை ஏறத்தாழ 9000 இலவசக் கூண்டுகளை வழங்கியுள்ள இவர், அண்மையில் தனது சேவையை பாரிஸ், லண்டன் உள்ளிட்ட பன்னாட்டு நகரங்களுக்கும் நீட்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

pondy


நகரமயமாதல் மற்றும் நவீனமயமாக்கத்தால் இடம் பெயர்ந்த அல்லது அழிந்த, சுற்றுச்சூழல் சமன்பாட்டின் முக்கிய காரணியான பறவைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை ஏற்படுத்தி அவற்றின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதோடு வாழும் சூழலை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பறவைக் கூண்டுகளை இவர் அன்பளிப்பாக அளித்துவருகிறார். 
 

மேலும், இவர் கடந்த மாதம் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நிறுவிய பலவண்ணப் பறவை ஊட்டிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்றால் அது மிகையல்ல.  இவற்றில் சிட்டுக்குருவி, அணில், புறா, பச்சைக்கிளி உள்ளிட்ட சிற்றினங்கள் உணவருந்தி பசியாறுகின்றன.

 

pondy



தொடக்கத்தில் பறவைகள் வளர்ப்பில் இருந்த இவரது ஆர்வம், மரணித்த ஒரு மாமரத்தால் வாழ்விடம் இழந்த சிறு பறவைகளின் துயரம் இவரது மன மாற்றத்திற்கு வித்திட்டதாக கூறுகிறார்.  இவர் சிட்டுக்குருவிக் கூண்டுகளைக் கொள்முதல் செய்யவும், நெல், தினை போன்ற தானியங்களைக் கொண்டு கூண்டுகளைப் பராமரிக்கவும் மாதம் தோறும் 6000 முதல் 7000 ரூபாய் வரை செலவிடுகிறார். தற்பொழுது பொதுச் சந்தையில் ஒரு கூண்டின் விலை ரூ.150 ஆக இருக்கின்ற போதிலும் புதுச்சேரி, ஆரோவில் பகுதியைச் சேர்ந்த ஜான்சன்  இவரது சேவையைக் கருத்தில் கொண்டு சகாய விலையில் இவருக்கு கூண்டுகளைத் தயாரித்து வழங்கி வருகிறார்.


 

pondy



இந்த ஆண்டு உலக சிட்டுக்குருவிகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று இவரது இல்லத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த விருப்பம் மற்றும் பராமரிக்கும் ஆர்வமுடைய பறவை ஆர்வலர்கள் மற்றும் நண்பர்களுக்கு 100 சிட்டுக்குருவி கூண்டுகளை பரிசளித்து மகிழ்ந்த இவர் சிட்டுகுருவிகளின் வாழ்வில் சத்தமில்லாமல் ஒரு மாற்றத்தை இவர் நிகழ்த்துகிறார் என்றால் அது மிகையல்ல. 
 

மேலும் இவரது சேவையை அங்கிகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் இவரது மூத்த சகோதரர் ராஜ்குமார் அவரது  மகனின் முதலாவது பிறந்த நாளான ஏப்ரல் 5 அன்று 70 சிட்டுக்குருவி கூண்டுகளைப் பரிசளிக்க முன்வந்துள்ளார்.  
 

சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட சிறு பறவைகளின் அழிவை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே சூழலியல் ஆய்வாளர்கள் அவதானித்த போதிலும், அண்மைக் காலங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவதற்கு நகரமயமாதல் மட்டுமின்றி, நவீனமயமாக்கல் என்ற போர்வையில் மனிதர்களால் இயற்கைக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக சிட்டுக்குருவிகளின் வாழ்விடங்கள் பாதிப்பு மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்றவைகளை  பிரதான காரணிகளாக கூறும் இவர், பொதுவெளியில் வீசப்படும் இறைச்சி கழிவுகளை  ருசித்த காகங்கள் சிட்டுக்குருவிகளை வேட்டையாடுவதும் இந்த சிற்றினம் அழிவுப்பாதைக்கு செல்வதற்கு புறக்காரணமாக இருக்கக்கூடும் என்று நம்புகிறார். 
 

மேலும் வயல்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை அழிப்பதால் அதைச் சார்ந்து வாழும் சிட்டுக்குருவிகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் அழிகின்றன எனவும்,  இதனால் உணவுச் சங்கிலி அறுபட்டு வாழ்சூழலில் உள்ள உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்புகள் பாதிக்கப்படலாம் என்கிறார். 
 

கடந்த 8 ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளைக் காக்க கூண்டுகளை அளித்ததோடு, புதுச்சேரி முழுவதும் இவர் முன்னெடுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் விளைவாக புதுச்சேரியில் சிட்டுக்குருவிகளின் நடமாட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் இவர், கூண்டுகளை அளிப்பது மட்டுமல்லாமல், அதை பராமரிக்க தொடர் ஆலோசனைகளை வழங்குகிறார்.  பறவைகளின் வாழ்வு மற்றும் பாதுகாப்பு, இயற்கைப் சமன்பாட்டோடு ஒருங்கிணைந்த தொடர்புடையது என்பதை உணர்ந்து நம்மால் அழிக்கப்பட்ட பறவைகளின் வாழ்விடத்தை பறவைகளைக் கொண்டே மீட்டெடுக்கும் அருண் போன்றோரின் முயற்சிகளுக்கு துணை நிற்கவேண்டியது மானுட சமூகத்தின் கடமையாகும். 
 

 


 
 

சார்ந்த செய்திகள்

Next Story

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்; மீண்டும் தொடங்கிய தாக்குதல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

The ceasefire ended; The attack resumed

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

 

 

 

Next Story

தொடரும் தாக்குதல்; 3 லட்சம் காசா மக்கள் அகதிகளாக வெளியேற்றம்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Continued attack; 3 million Gazans evacuated as refugees

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் மனித உரிமை அமைப்புகள் சர்வதேச நாடுகளும் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும். காசா நகரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாலஸ்தீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருக்கும் கட்டிடங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

இந்நிலையில் ஐநா வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை இஸ்ரேல் போர் தொடர்ந்து வரும் நிலையில் காசாவில் இருந்து சுமார் 3.38 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காசாவில் 22 லட்சம் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் 11 சதவிகித மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போதும் தீவிர தாக்குதல் தொடர்ந்து வருவதால் காசாவில் மீதம் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளது.