கரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களது உதவியை சமுதாயத்துக்கும், ஏழை மக்களுக்கும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தன்னுடைய ஒரு மாத ஊதியமான 1,14,572 ரூபாயை கரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் வழங்கினார்.