Skip to main content

எஸ்.பி. சீனிவாசனின் அதிரடி நடவடிக்கை! சகஜ நிலைக்கு திரும்பிய மக்கள்!!

Published on 28/09/2021 | Edited on 28/09/2021

 

S.P. Srinivasan's action People who have returned to normal

 

திண்டுக்கல்லில் எஸ்.பி. முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். கடந்த 22ஆம் தேதி திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனபட்டியைச் சேர்ந்த நிர்மலா தேவியையும், அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்த ஸ்டீபனையும் இரண்டு கொலைகார கும்பல் கொடூரமாக கொலை செய்து, அவர்களுடைய தலைகளை வெட்டி வீசிவிட்டுச் சென்றனர். அதைக் கண்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்தப் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்தக் கொலைகாரக் கும்பலைப் பிடிக்க எஸ்.பி. சீனிவாசன் ஆறு தனிப்படைகள் அமைத்து, தானும் அதிரடி நடவடிக்கையில் இறங்கி குற்றவாளிகளையும் பிடித்து சிறையில் கம்பி எண்ண வைத்தார்.

 

அதன் எதிரொலியாக மக்களும் பெரும் நிம்மதி அடைந்தனர். இருந்தாலும் தொடர்ந்து மாவட்ட அளவில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபடவும் உத்தரவிட்டார். அதேபோல் தானும் இரவு - பகல் பாராமல் வாகன சோதனைகளிலும்  நகரின் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்வதுடன் மட்டுமல்லாமல், கடைகள் முன்பாக தேவையில்லாமல் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என கடைக்காரர்களிடமும் வலியுறுத்திவருகிறார். அதேபோல், பேகம்பூர் பாரைப்பட்டி, நாகல்நகர், கடைவீதி, பழனிரோடு உள்பட சில பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி. சீனிவாசன், அவ்வழியாக வந்த பேருந்துகளையும் தடுத்து நிறுத்தி ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.

 

S.P. Srinivasan's action People who have returned to normal

 

அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் பலர் முகக்கவசம் அணியாமல் இருந்ததைக் கண்டு, முகக்கவசம் அணியச் சொல்லி வலியுறுத்தினார். அதேபோல் தேவையில்லாமல் கூட்டம் கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துவருகிறார். இப்படி கடந்த ஒரு வாரமாக எஸ்.பி. முதல் டி.எஸ்.பி.கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப். இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் அனைவரும் இரவு - பகல் பாராமல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருவதைக் கண்டு பொது மக்களும் எந்த ஒரு பயமும் இல்லாமல் சகஜ நிலைக்குத் திரும்பிவருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.