Skip to main content

ரூ.10 லட்சம் மதிப்பிலான செல்ஃபோன்கள் உரியவா்களிடம் ஓப்படைப்பு! - எஸ்.பி அறிவிப்பு!

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

SP handed over 10 lakh worth of lost cell phones to the rightful owners

 

குமரி மாவட்டத்தில், சமீபகாலமாக செல்ஃபோன் திருட்டுப் புகார்கள் அனைத்துக் காவல் நிலையங்களிலும் தொடா்ந்து பதிவாகிவருகின்றன. இந்த செல்ஃபோன்கள் எல்லாமே ஆன்ட்ராய்டு வகையைச் சோ்ந்தது. இதனால் அந்த செல்ஃபோன்களை கண்டுபிடிக்கவும் மேலும் செல்போன் திருட்டை தடுக்கவும் எஸ்.பி பத்ரி நாராயணன், உதவி ஆய்வாளா்கள் முகம்மது சம்சீா், செண்பகப் பிரியா தலைமையில் தனிப்படை அமைத்தார்.

 

SP handed over 10 lakh worth of lost cell phones to the rightful owners

 

இந்த தனிப்படையினா் இணையக் குற்றப்பிரிவு குழுவினருடன் சோ்ந்து திருடபட்ட மற்றும் தவறவிட்ட செல்ஃபோன்கள் 112 -ஐ கண்டுபிடித்தனா். இதையடுத்து, அந்த செல்ஃபோன்களின் உரிமையாளா்களை நேரில் அழைத்து அவா்களிடம் எஸ்.பி பத்ரி நாராயணன் ஒப்படைத்தார். அந்த செல்ஃபோன்களின் மொத்த மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். பின்னா் தொடா்ந்து எஸ்.பி செய்தியாளா்களிடம் கூறும் போது, "2020 பிப்ரவரி மாதத்தில் இருந்து 2021 பிப்ரவரி மாதம் வரை பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்ட மற்றும் தவறவிட்ட செல்ஃபோன்கள் 375 கண்டுபிடிக்கப்பட்டன.

 

இதில் இரண்டாவது கட்டமாக, இன்று 115 பேரிடம் அவா்களுடைய செல்போன் ஓப்படைக்கபட்டது. அதே போல் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மற்றும் திருடப்பட்டு அனாதையாக ரோட்டு ஓரங்களில் நிறுத்தப்பட்ட 29 பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், கடந்த 3 மாதங்களில் திருடப்பட்ட 100 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டு 40 குற்றவாளிகள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும் இதுபோன்ற குற்றச்செயல்களைத் தடுக்கும் விதமாக போலீஸாரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘என் காதலிய என்னோட அனுப்புங்க’ -  இன்னொருவர் மனைவியை வம்புக்கு இழுத்த இளைஞர் 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 youth threatens to send someone else  wife with him

 

நாகப்பட்டினம் காடாம்பாடி மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நேசமணி. இவர் மீது நாகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் குற்ற பின்னணி உடையவர்கள் பட்டியலிலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகே, அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் கத்தியை வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும், பொது மக்களையும் கத்தியால் குத்துவதற்கு பாய்ந்து சென்றதால், பொது மக்கள் அச்சமடைந்து நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

 

மேலும் அவ்வழியே வந்த டிராக்டரை நிறுத்தி ஓட்டுனரை குத்த பாய்ந்து ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த வெளிப்பாளையம் போலீசார்  அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட போது போலீசாரையும் கத்தியால் குத்த முற்பட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தன்னை பிடித்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதாக பயமுறுத்திய அவர், தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் வழிய, வழிய பொது மக்களையும் குத்துவதற்கு பாய்ந்தார். இதற்கு பயந்து வாகன ஓட்டிகள் வண்டிகளை நிறுத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

தொடர்ந்து பொது மக்கள் உதவியுடன் மடக்கி பிடித்த போலீசார் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை எடுக்க மறுப்பு தெரிவித்து தப்பிக்க முயன்றார். அவரை துரத்தி பிடிக்க சென்ற போலீசாரை மருத்துவமனை வாசலிலே வைத்து துரத்தி துரத்தி கத்தியால் குத்த பாய்ந்த வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகமே பரப்பரப்பானது. 

 

தொடர்ந்து மடக்கி பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றனர். விசாரணையில், 6 வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணிற்கு வேறு ஒருவரோடு திருமணம் ஆன நிலையில் கடந்த 2 வருடமாக அதே பெண்ணோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவன் வெளிப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது விசாரணைக்கு வந்தவர், அந்த பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்குமாறு ரகளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 

நாகையில் முன்னாள் காதலியும் இன்னொரு மனைவியான பெண்ணை தன்னோடு சேர்த்து வைக்க சொல்லி கத்தியால் பொது மக்கள் மற்றும் போலீசாரையும் குத்த பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

Next Story

பேருந்துடன் ஆற்றில் தள்ளுவோம்; கேரளா முதல்வருக்கு வந்த கொலை மிரட்டல்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Let's push the bus into the river; Kerala Chief Minister receives threat

 

கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களுடன் 140 தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ‘நவகேரள சதஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிகளுக்கு பயணம் செய்வதற்காக பெங்களூரில் இருந்து ரூ.1.05 கோடி செலவில் ஒரு புதிய சொகுசு பேருந்து வாங்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காசர்கோடு மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. அதன்படி, நேற்று (23-11-23) வயநாடு மாவட்டத்தில் நவகேரளா சதஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதனிடையே, நேற்று முன் தினம் (22-11-23) வயநாடு ஆட்சியர் அலுவலகத்திற்கு தபாலில் 2 கடிதங்கள் வந்தன. சிபிஐ (மாவோயிஸ்ட்) இயக்கத்தின் பெயரில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில், கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில், ‘பெரும் முதலாளிகளிடமும், மத தீவிரவாதிகளிடம் சரணடைந்த கேரளா அரசுக்கு, வயநாடு மாவட்டத்தில் நடக்கும் நவகேரள சதஸ் நிகழ்ச்சியின் போது தக்க பாடங்களை புகட்டுவோம். உண்மையான புரட்சி கம்யூனிஸ்டுகளான மாவோயிஸ்டுகளை துன்புறுத்தும் போலி கம்யூனிஸ்ட் பினராயி விஜயனை ரூ.1 கோடி பேருந்துடன் மானந்தவாடி ஆற்றில் தள்ளுவோம். 

 

வயநாடு மாவட்டத்தில் மானந்தவாடி, கல்பெட்டா, பத்தேரி ஆகிய இடங்களில் நடைபெறும் நவ கேரள சதஸ் நிகழ்ச்சியை நாங்கள் தடுப்போம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மாவோயிஸ்டுகளின் இந்த மிரட்டல் கடிதம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் பங்கேற்கும் நவ கேரள சதஸ் நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.