Advertisment

சூதாட்ட விடுதியில் நுழைந்த பெண் எஸ்.பி.! அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஷாக்!

SP Action

சூதாட்ட விடுதியில் நுழைந்த பெண் எஸ்.பி. எடுத்த அதிரடி நடவடிக்கையால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கடும் அதிர்ச்சியடைந்தார்.

Advertisment

திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக இருந்தவர் பொன்னி. இவர் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டார். திருவள்ளூர் எஸ்.பி.யாக இருந்த சிபி.சக்கரவர்த்தி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யாக பொன்னி பொறுப்பு ஏற்பதற்கு முன்னர் திருத்தணி கோவிலுக்கு சென்றார்.

Advertisment

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கு சூதாட்டத்துடன் கூடிய பலான விடுதி ஒன்று இருப்பது அவரது கவனத்திற்கு வந்தது. தி.நகர் எம்.எம்.ஏ. சத்யாவுக்கு சொந்தமானது இந்த விடுதி. புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி. பொன்னி, சூதாட்ட விடுதிக்கு சென்று எம்.எல்.ஏ. சத்யா மற்றும் கும்முடிப்பூண்டி விஜயகுமாரையும் சந்தித்தார். அப்போது இந்த விடுதிக்கு அனுமதி மறுப்பதாக தெரிவித்தார். இதனால் அவர்கள் இருவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த விடுதிக்கு அனுமதி மறுத்த காரத்தினால்தான் சிபி.சக்கரவர்த்தி திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டார்.

aiadmk hotel MLA SP Action
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe