Skip to main content

தொடங்கியது தென்மேற்கு பருவமழை!! வற்றிய அணைகளுக்கு நீர்வரத்து!!

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

கடந்த கால வடகிழக்குப் பருவ மழை தீய்ந்து போனதின் காரணமாக வற்றாத ஜீவ நதியான தென்மாவட்டத்தின் தாமிரபரணியாறு வற்றிப்போக  தொடங்கியது. ஆனால் அதிர்ஷ்டத்தின் பார்வையால். அதன் முந்தைய கோடைப் பருவமான தென் மேற்குப் பருவமழையினால் மே, ஜூன், ஜூலை தொடர் மாதங்களில் நான்ஸ்டாப்பாக  பெருக்கெடுத்தது வெள்ளம். வாராத தேவதையாக வந்து கொட்டிய மழையின் பலனாக நெல்லை மாவட்டத்தினுள்ள குறிப்பாக தென் மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டிய ஆறு அணைகளும் நிரம்பி மறுகால் ஓடியது கோடைகால ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

 

Southwest monsoon rain started!!



இதனால தாமிரபரணியை குடிநீர் ஆதாராமாக நம்பியுள்ள நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற நான்கு மாவட்ட மக்களும் பயனடைந்தனர். அதன்பின் செப்டம்பர் அக்டோபரில் பொழியும் வடகிழக்கு பருவமழை காலைவாரியதால் கோடையில் நிரம்பிய அணைநீர் நான்கு மாவட்ட மக்களுக்கும் தொடர்ந்து உதவியது. ஒரு லெவலுக்கு மேல் போனதும் அணைகள் வறண்டன. வழக்கமான கோடை அக்னி வெயில் கடந்த பிப்ரவரி முதல் ஜூன் ஆரம்பம் வரை நான்கு மாதங்கள் கொளுத்தி எடுத்தது. 

 

 

Southwest monsoon rain started!!

 

வெப்பத்தில் உச்ச அளவு கோல் 105 டிகிரி சென்ட்டிகிரேடாக உயர்ந்தது.  இதன் விளைவு அணைகளின் வறட்சி காரணமாக நான்கு மாவட்டத்திலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் துயரத்திற்குள்ளார்கள். சோதனையாக நெல்லை மாவட்டத்தைக் கோடையில் காப்பாற்றுகிற தென்மேற்கு பருவமழை மே இறுதியில் தொடங்க வேண்டியது 10 நாட்கள் தாமதமானது. 

 

Southwest monsoon rain started!!



இதனிடையே நேற்றிரவு தென்மேற்குப் பருவ மழை கேரளாவின் கொட்டத் தொடங்கியது, பத்தனம் திட்டா, கொல்லம் ஆரியங்காவு பகுதிகளில் பெய்ததின் விளைவு நெல்லை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை பெய்ததால் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் வெப்பம் தணிந்தது. தாமிரபரணியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 7 மி.மீ மழை பெய்ய, தண்ணீர் ஊற்றெடுத்து பாபநாசம் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது. தற்போது முதற்கட்டமாக 47.11 கன அடியாகி ஒரே நாளில் 12 அடி அணைநீர்  உயர்ந்து 31 அடியானது. இது, வரும் நாட்களில் உயரும் என்கிறார்கள் கண்காணிப்பு பொறியாளர்கள்.

நம்புவோம். நம்பிக்கை கொடுத்திருக்கிறது தென்மேற்குப் பருவமழை.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.