ராஜினாமாவை ஏற்க முடியாது;தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிவிப்பு!!

 The South Indian Film Clerical Union's announcement that resignation can not be accepted

பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க முடியாது எனதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இயக்குனர் பாக்யராஜ் கடந்த 6 மாதத்திற்கு முன்தான் தென்னிந்திய திரைப்படஎழுத்தாளர் சங்க தலைவராக பதவியேற்றார். அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் சர்கார் படத்தின் கதையும் வருண் என்ற இணை இயக்குனரின் செங்கோல் என்ற கதையும் ஒன்று என்று இயக்குனர் வருணனுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியைராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் அறிவித்திருந்தார். ஆனால் இந்த ராஜினாமாவை ஏற்க முடியாது எனதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாக்யராஜ் அவர்களின் ராஜினாமாவை ஏற்க முடியாது. அவரே தலைவராக தொடர்வார் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கபொதுசெயலர் மனோஜ்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

k bhagyaraj
இதையும் படியுங்கள்
Subscribe