தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி பி.வி. கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015- 2018 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளின் பதவி காலம் 2018-ல் நிறைவடைந்த நிலையில், தற்போது வரை புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடக்காமல் உள்ள நிலையில் அதிகாரி நியமனம்.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியாக சேகர் நியமிக்கப்பட்ட நிலையில் அரசு நடவடிக்கை. நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தீர்ப்பு வரும் வரை சிறப்பு அதிகாரி பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது.
Follow Us