Advertisment
தமிழகத்தில் கரோனா தாக்கம் அதிகமான காரணத்தால் தமிழகம் முழுவதும் ஒலி, ஒளி அமைப்பாளர்களைத் தவிர்த்து பிற தொழில் செய்வோருக்கு 50% தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒலி, ஒளி அமைப்பாளர்கள், மேடை கலைஞர்கள் போன்றோருக்கு தொழில் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஒலி, ஒளி அமைப்பாளர்கள் மற்றும் மேடை மெல்லிசை இசைக் கலைஞர்கள் சார்பில் 50 சதவீதம் தளர்வு வழங்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.