'வருத்தமாக இருக்கிறது, உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்' - கலைவாணர் அரங்கில் அமித்ஷா பேச்சு!

 'Sorry I'm sorry' - Amitsha at the kalaivanar arangam

இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்பொழுது சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும்அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிமற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அவரை வரவேற்றனர்.முன்னதாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் காணொளிக் காட்சி மூலமாகதிருவள்ளூர் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தைநாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.61,843 கோடியில்மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும்அடிக்கல் நாட்டினார். அதேபோல் கோவை அவிநாசி சாலையில் 1,620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி ஆற்றில் கதவணை கட்டும் திட்டத்திற்கும்அடிக்கல் நாட்டினார்.309 கோடி மதிப்பில் சென்னை வர்த்தக மையத்தை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 3 திட்டங்கள் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களுக்குஅடிக்கல் நாட்டினார்.

 'Sorry I'm sorry' - Amitsha at the kalaivanar arangam

இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில்,தமிழ் மொழியில் உரையாற்ற முடியாததற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். உலகில் மிகத் தொன்மையான மொழியான தமிழில் பேச முடியாதது எனக்கு வருத்தமே. தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மிகவும் தொன்மையானது. கரோனாவிற்கு எதிராக அரசு மட்டுமல்ல 130 கோடி மக்களும் போராடுகிறார்கள். கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தேசிய அளவில் தமிழகத்தில் தான் அதிகம். கரோனா தடுப்பு மட்டுமல்ல நிர்வாகத் திறனிலும் தமிழகம்தான் இந்தாண்டு முதலிடம். நாடு முழுவதும் விவசாயிகளைக் கட்டுப்படுத்திவந்த இடைத்தரகர்களை நீக்கும் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

amithshah kalaivanar arangam
இதையும் படியுங்கள்
Subscribe