Advertisment

புழல் சிறையில் கம்பி எண்ணப் போகிறார் ஜெயக்குமார்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சாடல்!

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

ஜெயகுமார் விரைவில் புழல் சிறையில் கம்பி எண்ணப் போகிறார் என தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை புழல் அருகே நேற்று நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது,

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட பாஜகவின் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணனுக்குத் தகுதியில்லை. நாடோடி மன்னனாகப் பிரதமர் வெளிநாட்டிலேயே சுற்றுகிறார். இந்திய ஏழைகளைப் பற்றிய கவலை பிரதமருக்கு இல்லை.

ஜெயலலிதா இருக்கும் வரை வாய் திறக்காத அமைச்சர் ஜெயகுமார், கடந்த சில மாதங்களாக அடாவடித்தனமாக பேசி வருகிறார். காங்கிரஸை ஒழித்து விட்டதாகக் கூறும் ஜெயகுமார், விரைவில் புழல் சிறைக்குச் சென்று கம்பி எண்ணப் போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

evks jayakumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe