Song writer Velmurugan poem about perarivalan release

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் திரைப்பட பாடலாசிரியர் வேல்முருகன் ஒரு கவிதை எழுதியுள்ளார்.

அந்தக் கவிதை:

Advertisment

என் வீட்டுச்சுவரும்

உன் வீட்டுச் சுவரும்

ஒன்றல்ல

உன் சுவற்றில் வாசனைத் திரவம்

என் சுவற்றில் ரத்த வாடை

என் சோற்றுப்பானையும்

உன் சோற்றுப்பானையும்

ஒன்றல்ல

உன் பானையில் பாலும் நெய்யும்

என் பானையில் நொய்யும் குருணையும்

என் இரவு பகலும்

உன் இரவு பகலும்

ஒன்றல்ல

உன் இரவுகள் நிம்மதியும் அமைதியும்

என் இரவுகள் நிர்கதியும் ரணமும்

என் பொழுதுபோக்கும்

உன் பொழுதுபோக்கும்

ஒன்றல்ல

உன் பொழுதுகள் காலாட்டிக்கொண்டு கழிபவை

என் பொழுதுகள் கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு ஊஞ்சலாடுபவை

என் வியர்வையும்

உன் வியர்வையும்

ஒன்றல்ல

உன் வியர்வை சிந்துவது ஆரோக்கியத்திற்கு

என் வியர்வை சிந்துவது ஆயுள் தீர்ப்பதற்கு

என் விளையாட்டும்

உன் விளையாட்டும்

ஒன்றல்ல

உன் ஆட்டம் மக்கள் முன்னிலையில்

கத்தி விளையாடியது

என்‌ ஆட்டம் கத்திமுனையில்

சருக்கு விளையாடியது

ஏழை என் குரலும்

அதிகாரம் உன் குரலும்

ஒன்றல்ல

ஆனாலும் ஆர்ப்பரிக்கும்

அலையென உள்நுழைந்து சிறை உடைக்கும்