Skip to main content

பை தூக்க மலைச்சாக்க... எதிர்காலம் ரொம்ப ரொம்ப சிக்கலே...

Published on 02/02/2019 | Edited on 02/02/2019
Song release



14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது தமிழக அரசு. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த பாடலாசிரியர் எம்.எஸ்.மதுக்குமார் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இப்பாட்டின் வெளியீட்டு விழா மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பொன்னம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
 

''பை தூக்க மலைச்சாக்கா மக்களே... எதிர்காலம் ரொம்ப ரொம்ப சிக்கலே'' என்ற பாடலை ஷைனி மற்றும் ஜார்ஜ் பாட ஈரோடு சாம் இசையமைத்திருந்தார். மடைவாசல் குழுவை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங், பிரபாகர், கார்த்தி, காட்வின் மற்றும் சுசி ஒருங்கிணைத்திருந்தனர். 
 

செயல் அலுவலர் சாகுல்ஹமீது, டாக்டர் சுப்புராம் ஆகியோர் தலைமையில் ஆடியோவை பள்ளி மாணவிகள் வெளியிட்டனர். இந்த பாடலின் யூடூப் பதிவினை துப்புரவு தொழிலாளர்கள் வெளியிட்டனர். 
 

பிளாஸ்டிக் தவிர்ப்பு சம்பந்தமான கும்மிப்பாட்டு, பேச்சு போட்டி என களைகட்டிய இந்த நிகழ்வை பற்றி பாடலாசிரியர் எம்.எஸ்.மதுக்குமார் பேசியபோது,

 

''அரியலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்தவன் நான். ரொம்ப சந்தோஷமா இருக்கு. 2015 முதல் பொன்னம்பட்டி பேரூராட்சி பிளாஸ்டிக் பொருளுக்கு எதிராக போராடிவருகிறது என்பதையறிந்து இந்த மக்களை கௌரவிக்கும் விதமாக பாடலை இங்கு வெளியிட முடிவு செய்தோம். இந்த பாடலை பெருநகர மற்றும் அனைத்து கிராம ஞ்சாயத்து அலுவலர்கள் மூலம் கொண்டு செல்ல அரசு உதவவேண்டும்.
 

 இதனால் நெகிழியால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் விரைவில் உணர்ந்து மாற வாய்ப்பு உண்டு. மேலும் கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் எடுப்பதை காட்டிலும் இந்த பாடலை மக்கள் கூடும் கடைவீதி, பேருந்து நிலையம், இரயில்நிலையம் மற்றும் பள்ளிகளில்  ஒலிபரப்புபதும், இதன் வீடியோ பதிவை போட்டு காட்டுவதும் மிகவும் எளிது. மனமிருந்தால் மார்கம் உண்டு'' என்றார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ - பைக் டாக்சிகளுக்கு தடை!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
ban on bike taxis in karnataka

வாடகை கார், பைக் டாக்சி போன்ற வாகனங்கள் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வேகமாகவும், பயணக் கட்டணம் குறைவாகவும் கொடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரில் ஊஃபர், ரேபிடோ போன்ற சில நிறுவனங்கள் பைக் டாக்சி சேவைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியது.

இதற்கு ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த அனுமதியால் தங்களின் வருவாய் பாதிக்கப்படுவதாகக் கூறி போராட்டங்கள் நடத்தினர். ஆனால், அன்றைய அரசு தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பதாகப் பல புகார்கள் எழுந்தன. அந்த வகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூர் பகுதியில் பைக் டாக்சியில் சென்ற பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. 

இந்த நிலையில், இந்த மின்சார பைக் டாக்சி திட்டத்துக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த மின்சார பைக் டாக்சி திட்டம், மோட்டார் வாகன சட்டத்தை மீறுகிறது. இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படுகிறது. மேலும், இந்த இருசக்கர மின்சார வாகனங்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. வாகன நம்பர் பிளேட் இல்லாத மின்சார வாகனங்களால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், கர்நாடகாவில் இந்த மின்சார பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

40 டன் பிளாஸ்டிக் பறிமுதல் - வியாபாரிகளுக்கிடையே தகராறு

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
30 thousand tons of plastic seized in Tiruvannamalai

திருவண்ணாமலை நகரில் சிவன்படவீதி என்கிற கருவாட்டுக்கடை தெருவில் பிளாஸ்டிக் மொத்தமாக விற்பனை செய்யும் குடோனில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் நேரடியாக ஆய்வு செய்தார். வெளியே பார்க்க கடைபோல் இருந்தது, உள்ளே சென்றால் குறைந்த பட்ச காற்று வசதி கூட இல்லாமல் பாதாள குகைக்குள் போவதுபோல் சுத்தி சுத்தி போய்க்கொண்டே இருந்தது. உள்ளே பரந்துவிரிந்த குடோனில் பயன்படுத்தக்கூடாத வகையை சேர்ந்த பிளாஸ்டிக் கவர் பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாக அடுக்கிவைக்கப்பட்டு இருந்ததைப்பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் உரிமையாளர் என வந்தவர் கலெக்டரிடம், நான் ஜீ.எஸ்.டி கட்டிட்டு தான் இந்த பொருளை வாங்குறேன், அது எப்படி குற்றமாகும், இதை எதுக்கு பறிமுதல் செய்யறிங்க? என கேள்வி எழுப்பினாரர். நீங்க இந்த பொருளை எங்கயிருந்து வாங்கறிங்க? சேலத்தில் இருந்து என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்வது சட்டப்படி தவறு. நீங்க இந்த பிளாஸ்டிக் வாங்கும் இடத்தின் முகவரியை சொல்லுங்க என்று கேட்டனர். அதற்கு, “தெரியாது, போன் செய்வேன் சரக்கு அனுப்புவாங்க சார்” என பல்டியத்தார். அட்ரஸ் தெரியாம எப்படி பொருள் வாங்கறீங்க? பணம் தர்றீங்க? ஜி.எஸ்.டி கட்டறதா சொல்றீங்க எனக்கேட்க பதில் சொல்ல முடியாமல் மழுப்பினார்.

30 thousand tons of plastic seized in Tiruvannamalai

நகராட்சி ஊழியர்களை வைத்து உள்ளிருந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பை வண்டியில் ஏற்றி அனுப்பிக்கொண்டே இருக்க, வந்துகொண்டே இருந்தது. அந்த ஒரு குடோனில் இருந்து மட்டும் சுமார் 30 ஆயிரம் கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் 40 டன் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நெகிழி என்கிற பிளாஸ்டிக் பறிமுதல் செய்யச்சென்ற கடைகள் மற்றும் குடோன்களில் காலாவதியான, பயன்படுத்த தகுதியற்ற உணவு பொருட்களான டொமோட்டா சாஸ், பாதாம், முந்திரி பாக்கெட்டுகள், திண்பண்ட பொருட்களும் இருந்தன. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை வரவைத்து ஆய்வு செய்யச்சொன்னார் கலெக்டர். “நாங்க விற்கிறோம் மளிகை கடை, ஹோட்டல்காரங்க வந்து வாங்கிக்கிட்டு போறாங்க, அங்கயெல்லாம் ஏன் ரெய்டு போகல..” என வடநாட்டை சேர்ந்த அந்த முதலாளி கேட்க, அங்கிருந்த மற்ற வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் வியாபாரிகளுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

படங்கள் - எம்.ஆர். விவேகானந்தன்