Skip to main content

‘முதலில் திருமணத்திற்கு சம்மதம்... பின்னர் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்’-தாயின் செயலால் ஸ்தம்பித்த மகன்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

son stunned by mother’s action

 

இந்திய திருமணம் சட்டத்தின் படி ஆண்களுக்கு 21 வயதும் பெண்களுக்கு 18 வயதும் பூா்த்தியடைந்தால் தான் திருமணம் செய்ய முடியும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் இதை மீறி தற்போது சிறு வயதில் திருமணங்கள் பல இடங்களில் நடந்து வருகிறது. அதனை தகவல்களின் அடிப்படையில் தடுக்கும் விதமாக சமூக நலத்துறையும், காவல் துறையும் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 22 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

 

இந்த நிலையில் மங்கலகுன்று பகுதியை சேர்ந்த 20 வயது நிரம்பிய மணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மரையின் படித்துள்ளார். இவருக்கும் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய நித்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் பள்ளியில் படிக்கும் போதே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் தொடர்ந்து காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய ஆசைப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர். இந்த விசயம் இருவருடைய வீட்டிற்கு தெரிய வரவே இருவரையும் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் ஓடிப் போய் திருமணம் செய்வதில் முடிவாக இருந்துள்ளனர். 

 

இதற்கிடையில் நித்யாவின் பெற்றோர்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததோடு மணியின் பெற்றோரிடமும் பேசியுள்ளனர். இதற்கு மணியின் தாயார் முழுமையாக விருப்பம் தெரிவிக்காமல் அரை குறை மனதுடன் சம்மதித்துள்ளார். இதனை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. குளச்சல் போலீஸ் நிலையம் அருகில் திருமணம் மண்டபமும் புக் செய்து நேற்று (29-ம்தேதி) திருமணம் நடக்க இருந்ததையொட்டி திருமண மண்டபமும் குலை வாழை தோரணங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில் காலையில் திருமண மண்டபத்துக்கு செல்வதற்கு தயாராகி கொண்டிருந்தனர் மணி மற்றும் அவரது உறவினா்களும். அந்த நேரத்தில் சட்டென்று சமூக நலத்துறை அதிகாரிகளும் போலீசாரும் மணியின் வீட்டுக்குள் நுழைந்தனர். மணிக்கு இன்னும் 21 வயது நிரம்பாததால் அவருக்கு திருமணம் செய்ய முடியாது என்றும் இது சம்பந்தமாக மணியின் தாயார் புகார் கொடுத்துள்ளார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

இதைக் கேட்ட உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். பின்னர் மணமக்களாக இருந்த இருவர் மற்றும் இருவரது பெற்றோர்களையும் நாகர்கோவிலில் சமூக நலத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் மணிக்கு 21 வயது நிரம்பும் வரை திருமணம் செய்யக்கூடாது என்று எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினார்கள். அதே போல் திருமண வயது நிரம்பாத ஒருவருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க முன் வந்த பெண்ணின் பெற்றோர்களையும் அதிகாரிகள் எச்சரித்தனா். மகனின் காதல் திருமணத்தை சம்மதம் தெரிவிப்பது போல் சம்மதித்து கடைசியில் திட்டமிட்டே தாயார் நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Misbehaviour of student with the help of parents in nagercoil

நாகர்கோவில் மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி. இவர், தனது குடும்பத்துடன் பூதப்பாண்டி பகுதியில் தங்கி இருந்து பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பள்ளி மாணவி, மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில், பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், அந்த மாணவி சில மாதங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைக்காக கீரிப்பாறை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே, ஆரல்வாய்மொழி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பிரகாஷ் (23) என்பவரின் பாட்டி வீடு, மாணவியின் பாட்டி வீடு அருகே உள்ளது. அந்த வகையில், பிரகாஷும், தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். 

பக்கத்து வீடு என்பதால், மாணவிக்கும் பிரகாஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பிரகாஷ் தனது பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி திருப்பூர் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அவர், அங்கு தனியாக வீடு எடுத்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, மாணவி மாயமான வழக்கில் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரகாஷை தேடி வருவதை அறிந்த பிரகாஷின் பெற்றோர், திருப்பூர் மாவட்டத்திற்கு சென்று மாணவியை அழைத்து வந்துள்ளனர். மேலும் அவர்கள், நேற்று முன் தினம் (06-03-24) மாணவியை பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் மாணவியின் வீட்டு முன்பு விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் பிரகாஷும் தலைமறைவாகி விட்டார் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவாகியுள்ள பிரகாஷை பற்றி போலீசார் மேற்கொண்ட கூடுதல் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, பிரகாஷுக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து, அந்த பெண்ணை, அவரது குழந்தையுடன் அழைத்துக் கொண்டு ஆரல்வாய்மொழி பகுதியில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது, பிரகாஷ், அந்த பெண்ணை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தாங்காமல், அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பிரகாஷ் இது போல் பல பெண்களை கடத்தி வந்து திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி அவர்களை கொடுமை செய்து துரத்தி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமறைவான பிரகாஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.