Skip to main content

மருமகன் மாடு திருடன் மாமனார் மாடு புரோக்கர் – தர்ம அடி தந்த பொதுமக்கள்

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஜெயசீலன். இவர் தனது நிலத்தின் ஒருபகுதியில் மாட்டு கொட்டகை அமைத்து 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்துவருகிறார்.

 

vinayagam


கடந்த மே 5ந் தேதி விடியற்காலை பசுவின் மடியில் இருந்து பால்கறக்க ஜெயசீலன் சென்றபோது, ஒரு மாடு காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். கயிறு அறுத்துக்கொண்டு எங்கேயாவது மேய்ச்சலுக்கு போய்விட்டதா தேடிப்பார்த்தபோது தோல்வியே மிஞ்சியது. தனது மாடு திருடு போய்விட்டதாக களம்பூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் தந்தார்.
 


இதே களம்பூர் காவல்நிலையத்தில், கீழ்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் பசுமாடு சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக புகார் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ஜெயசீலனுக்கு தெரியவந்தது. இதேபோல் வடமாதிமங்களம் பகுதியிலும் சில மாடுகள் திருடு போனதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாடு திருடன் யார் என போலீசாரும், மாட்டை பறிகொடுத்த விவசாயிகளும் தேடிவந்தனர்.



போளூர் அடுத்த கேளுரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். மாடுகளை திருடியவர்கள் இப்படிப்பட்ட சந்தைகளில் தான் வந்து விற்பார்கள் என்பதால் ஜெயசீலன் சந்தைக்கு சென்று தனது மாடு விற்பனைக்கு வந்துள்ளதா என தேடினார். அப்போது, அவரது மாட்டை, டாட்டா ஏசி என்கிற குட்டியானை வண்டியில் ஏற்றுவதை தெரிந்து, அருகில் சென்று பார்த்தபோது, அங்கு சிலருடன், அவர் ஊரான களஸ்தம்பாடியை சேர்ந்த விநாயகம் என்பவனை பார்த்து ஆச்சரியமானவர். பின்பு மாடு வாங்கியவர்களை விசாரித்தபோது அவர்கள், இவர் தான் விற்றார் என விநாயகத்தை காட்டியுள்ளனர். அவரிடம் கேட்டபோது, சரியாக பதில் சொல்லவில்லையாம்.
 

vinayagam


அவர் போய் கேட்டபோது, இது என்னோட மாடு என மிரட்டலாக சொல்லியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியானவர், இது என்னோட மாடு திருடி வந்து விற்கிறான் என சத்தம் போட்டு சண்டைபோட, சந்தைக்கு வந்திருந்த விவசாயிகள் கூடி அவனிடம் விசாரிக்க முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லியுள்ளார். இதனால் விவசாயிகள் ஒன்றுகூடி அவரையும், அவருடன் இருந்த இருவரையும் அடித்து உதைத்து அங்கிருந்த புளியமரத்தில் கட்டிப்போட்டனர். இதுப்பற்றிய தகவல் களம்பூர் போலீசாருக்கு சொல்லப்பட அவர்கள் வந்து இவர்களை மீட்டு காவல்நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர்.
 


விசாரணை பற்றி போலீசார் நம்மிடம் கூறும்போது, ‘விநாயகமும், இவனது மாமனார் வேலூர் பென்னாத்தூரை சேர்ந்த கன்னியப்பனுக்கும் மாடு திருடி விற்பது தான் தொழிலே. விநாயகம் மாடு திருடிவருவான், மாடு விற்பனை புரோக்கராக உள்ள கன்னியப்பன், மாட்டை விற்பான். திருடிய மாட்டை வண்டியில் ஏற்றிச்செல்வது ராஜேஷ். இவன்கள் சுத்துவட்டாரங்களில் மாடு திருடியவன்கள் என தெரியவந்துள்ளது’ என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் வீட்டில் அரங்கேறிய சம்பவம்; தாய், தந்தை, மகன் கைது!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 mother, father and son, were arrested robbery of AIADMK official  house

திருவண்ணாமலை குபேர மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் முருகன். முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற நகரப் பொருளாளராக இருந்தார். தன்னுடைய குடும்பத்தினருடன் திருமணத்திற்காக வெளியூர் சென்ற நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் 28ம் தேதி திருவண்ணாமலைக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி ஆகியவற்றைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

அதிமுக பிரமுகர் முருகன் வீட்டில் கொள்ளையடித்ததாக தந்தை சிவா, தாய் அமுதா, இவர்களின் மகன் ரஞ்சித்குமார் மற்றும் ரஞ்சித்குமார் நண்பர் ஸ்ரீராம் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீசார் மார்ச் 5 ஆம் தேதி கைது செய்து கிராமிய காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

கொள்ளையடித்த நகைகளில் சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவியை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். குறிப்பாக ரஞ்சித்குமார் மற்றும் ஸ்ரீராம் இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் கைதாகி சிறைக்குச் சென்று தற்போது வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக இவர்களுக்கு ரஞ்சித்குமாரின் தாய், தந்தையர் உதவியாக உள்ளனர் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஸ்ரீராம் என்பவரின் கைரேகை மற்றும் அவரின் சமூக வலைத்தள பக்கங்களைக் கொண்டு அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை வேலூர் சாலையில் உள்ள தீபம் நகரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

Next Story

தொடர் குற்றச் சம்பவம்; பலே திருடனைச் சுற்றி வளைத்த போலீஸ்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
thief who was involved in two-wheeler theft was arrested

வேலூர், காட்பாடி, திருவலம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போயுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே காட்பாடி ரயில் நிலைய பகுதியில் ஒரு இருசக்கர வாகனம்  திருடு போனது தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து காட்பாடி டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று திருவலம் கூட்ரோடு பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். மேலும் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவமும் இவரின் உருவமும் ஒன்றாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, பிடிபட்ட நபர் திருவலம் குகைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம் (வயது 40) என்பதும், இவர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரிய வந்தது.

அவரைக்  கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 15 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.