Skip to main content

சொத்துக்காக மாமியாரைக் கொன்ற மருமகன் கைது... பேரன் வெளிநாட்டில் பதுங்கல்!!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

பாளையங்கோட்டை ராஜகோபலபுரத்தைச் சேர்ந்த வேலாயுதம் மனைவி வெள்ளையம்மாள் (80). கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமானதால் வெள்ளையம்மாள் தனியாக வசித்திருக்கிறார். மூத்த குடியான வெள்ளையம்மாளை, பணிப் பெண் இருளம்மாள் என்பவர் கவனித்து வந்திருக்கிறார். வெள்ளையம்மாளுக்கு சொத்துக்கள் இருப்பதால் அதனை அபகரிக்க உறவினர்கள் முயற்சி செய்துள்ளனர்.

 

 Son-in-law arrested for Issue ... grandson hiding abroad

 

இந்த நிலையில் கடந்த வருடம் நவ 20ம் தேதி வெள்ளையம்மாள் இறந்து விட, அவர் உடல் நலம் குன்றியதால் மரணமடைந்தார் என உறவினர்கள் கருதினராம். அதே சமயம் பாளையின் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து போலீசார் வெள்ளையம்மாளின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பினர். அறிக்கையில் விஷம் கொடுத்துக் கொலை நடந்தது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து இன்ஸ்பெக்டர் செழியன், எஸ்.ஐ.க்கள், சுப்பிரமணி, முத்தப்பா ஆகியோர் பணிப் பெண் இருளம்மாளிடம் துருவித் துருவி விசாரித்துள்ளனர். அது தொடர்பாக அதே பகுதியின் தேவராஜனைப் பிடித்து உரிய வகையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

 Son-in-law arrested for Issue ... grandson hiding abroad


விசாரணையில் வெளிப்பட்டது குறித்து விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாவது.

இறந்த வெள்ளையம்மாளுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன. ஆனால் அவர் தனித்து வாழ்ந்தவர் தனது சொத்தின் ஒரு பகுதியை விற்று 24 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார். இதனிடையே அவரது மருமகனான தேவராஜன் அவரது மகன் ஜான் பிரகாஷ் இருவரும் சொத்துக்களை அடையவும் மருத்துவச் செலவிற்காகவும் வெள்ளையம்மாளிடம் பணம் கேட்டுள்ளனர். தன் மருமகனுக்கும் பேரனுக்கும் அவர் அதனைக் கொடுக்க மறுத்து விடவே, அது தொடர்பாக கடந்த 20.11.2019 அன்று இவர்களுக்குள் வாக்கு வாதமேற்பட்டுள்ளது. அது சமயம் வெள்ளையம்மாளின் வாயைப் பிடித்து அவளது தொண்டையில் பூச்சிக் கொல்லி விஷத்தை ஊற்றியுள்ளனர். இதனால் விஷவாடை வெளியே தெரியவில்லை. இயற்கையாக மரணமடைந்தார் என அவரது இதர உறவினர்கள் கருதினர். ஆனால் உடற்கூறு ஆய்வில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது. அம்பலமானது.

இதன் பின் கொலை தொடர்பாக தன் மகன் ஜான் பிரகாஷ் போலீசிடம் சிக்காமலிருக்க தந்தை தேவராஜன் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்க, தேவராஜன் மட்டும் சிக்கியுள்ளார். தொடர்ந்து வெளிநாட்டிலிருக்கும் ஜான்பிரகாஷைக் கொண்டு வர மாநகர போலீஸ் துணை கமிசனரான சரவணன் நடவடிக்கையை மேற் கொண்டுள்ளதாக நம்மிடம் பேசியவர்,

வெள்ளையம்மாள் மரணமடைந்த போது நாங்கள் வழக்கம் போல் தற்கொலை எனப்படும் 174 பிரிவில் தான் வழக்குப் பதிவு செய்தோம். ஆனால் உடற்கூறு ஆய்வில் விஷம் கொடுக்கப்பட்டது. தெரிய வரவே, பின்பு நடத்தப்பட்ட விசாரணையில் தேவராஜனைப் பிடித்து விசாரணை செய்தோம். நடந்தவைகளை சொல்லி விட்டார் அவரைக் கைது செய்திருக்கிறோம் என்றார்.

குற்றச் செயல்களில் ஜெகஜாலக்கில்லாடியேயானாலும் கிடைக்கும் ஒருதுரும்பு அளவு ஆதாரம் கூட அவனைச் சிக்க வைத்து விடும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.