நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில், நாகை காடாம்பாடி நகராட்சி நடுநிலை பள்ளியில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரும், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவியுடன் வந்து காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அப்பொழுது வாக்களிக்க வந்த மூதாட்டி ஒருவர் வாக்குச்சாவடிகள் செல்ல முடியாமல் நிலை தடுமாறிவந்தார். அதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவப் படை காவலர், அந்த மூதாட்டியை தூக்கி சென்று வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்கு உதவி செய்தார். அந்த சம்பவம் பலரையும் நெகிழவைத்தது.
Show comments