Skip to main content

திருமணத்திற்கு முந்தைய நாள் அமெரிக்கா சென்ற மணப்பெண்... கெஞ்சிய மணமகன்... அதிர வைத்த காரணம்!

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

சாப்ட்வேர் என்ஜினீயருக்கும், அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென்று மணப்பெண் திருமணத்திற்கு முந்தைய நாள் அமெரிக்காவிற்கு சென்றதால் திருமணம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் தினேஷ். இவருக்கு அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் மித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்தை திருப்பதியில் வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் திருமண செலவு முழுவதையும் மணமகன் தினேஷ் வீட்டார் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது. 

 

incident



இதனையடுத்து திருப்பதியில் மண்டபம், விருந்தினர்கள் தங்குவதற்காக அறைகள் மற்றும் சாப்பாட்டு செலவு என அனைத்தும் மணமகன் வீட்டார் பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் திடீரென மணமகள் அமெரிக்காவுக்கு பறந்து சென்று விட்டார். இதனால் பதறிப்போன மணமகன் வீட்டார் பெண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது மாப்பிள்ளை தினேஷிடம் பேசிய மணப்பெண் மித்ரா, உங்களுடைய மூக்கு பெரிய அளவில் இருப்பதாக என்னுடைய தோழி எல்லாரும் கிண்டல் செய்கின்றார்கள். அதனால் எனக்கு உங்களை திருமணம் செய்ய பிடிக்கவில்லை அதனால் அமெரிக்காவிற்கு திரும்பி வந்துவிட்டேன் என்று போனில் தெரிவித்துள்ளார். மேலும் திருமணத்தை நிறுத்தி விடுங்கள் என்றும் மித்ரா கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகன் தினேஷ் உங்களுக்காக திருமணத்திற்குப் பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சரி செய்து கொள்கிறேன் என்று மித்ராவிடம் சமாதானம் செய்துள்ளார். ஆனால் மணமகன் தினேஷ் எவ்வளவோ சமாதானம் செய்தும் திருமணத்திற்கு விருப்பம் இல்லை நிறுத்தி விடுங்கள் என்று மித்ரா கூறிவிட்டார். 


இந்த சம்பவத்திற்கு பிறகு திருமணம் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின்பு தாங்கள் செலவு செய்த பணத்தில் பாதியளவு திருப்பி கொடுங்கள் என்று மணப்பெண் வீட்டாரிடம் மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். அதற்கு செலவு செய்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்று மித்ரா வீட்டார் தெரிவித்துள்ளனர். பின்பு தினேஷ் வீட்டார்கள் மணமகள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது போலீஸ் புகார் அளித்து உள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.