அதே போல கிராமங்களில் நோய் தொற்று, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள இன்று வரை மொடக்கத்தான், தூதுவளை, போன்ற பலவகை மூலிகை செடிகளை சூப்பாக வைத்து குடித்து வருகிறார்கள். ஆவாரம் பூ சூப்பும் குடித்து நோய் தொற்றில் இருந்து தற்காத்து வருகின்றனர்.
தற்போது கரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த கிருமி மக்களை தாக்கிவிடக் கூடாது என்ற முயற்சியில் கடந்த சில நாட்களாக மீண்டும் சொந்த செலவில் மூர்த்தி புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் சூப் கொடுத்து வருகிறார்.
ஒவ்வொரு நாளும் சுமார் 500 பேருக்கு வழங்கி வருகிறார். நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துவிட்டாலே கிருமிகள் தொற்றாது அதனால் தான் இந்த சூப்கள் கொடுக்கிறோம் என்கிறார் மூர்த்தி.
ஒவ்வொரு நாளும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாமூண்டி பார்வையிட்டு வருகிறார். இதே போல பல இடங்களிலும் கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.