Social welfare officials rescue a 17-year-old girl

Advertisment

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுமாணவிக்கு வயலூர் முருகன் கோவிலில் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், இன்று காலை திருமண நிகழ்வு நடைபெறுவதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற அதிகாரிகள் 17 வயது சிறுமியை மீட்டு மணமகன் வசந்த்(21) என்பவரையும் அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்களை அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.