Advertisment

சமூகநீதி நாள்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு துரைமுருகன் புகழாரம்!

h

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சில அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (06.09.2021) சட்டப்பேரவையில் வெளியிட்டார். பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி, இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இதனை அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின்தலைவர்களும் வரவேற்று பேசினார்கள். இறுதியாக பேசிய அவை முன்னவர் துரைமுருகன், இந்த அறிவிப்பு வெளியிட்ட முதல்வரை வெகுவாக பாராட்டினார்.

Advertisment

இதுதொடர்பாக பேசிய அவர், "கலைஞரின் சுயமரியாதை உணர்வு, முதலமைச்சர் இந்த அறிவிப்புகளை வாசிக்கும்போது தெரிந்தது. திராவிட இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது. துரோகிகள் தோன்றினால்தான் அழிக்க முடியும். ஆனால் அதுவும் தோன்ற முடியாது" என்றார்.

Advertisment

stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe