Skip to main content

சுகாதாரத்துறை அமைச்சரின் விழாவில் காணாமல் போன தனிமனித இடைவெளி!

Published on 14/06/2020 | Edited on 15/06/2020

 

social distance Missing at Health Minister's Ceremony


கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளி அவசியம் அதைப் பின்பற்றாத மக்களை நினைத்து வருத்தமாக உள்ளது. அதனால் தான் கரோனா அதிகமாகப் பரவி வருகிறது என்று தினசரி வருத்தப்பட்டே ஊடகங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
 


அதேபோல மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தினசரி செய்தியாளர்களைச் சந்திக்கும் போதும் முகக் கவசம் அவசியம் அணிவதுடன் சமூக இடைவெளி மிகவும் அவசியம் அப்படி இருந்தால் மட்டுமே கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் எனறு ஒவ்வொரு நாளும் தமிழக மக்களுக்கு அறிவுரை சொல்லி முடிப்பார்.

ஆனால் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நடந்த தனது சொந்த செலவில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை போல பேசி முடித்த பிறகு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். அப்போது சமூக இடைவெளியை அனைவருமே மறந்துவிட்டனர்.
 


அதேபோல அடுத்து செல்லப்பா நகரில் பூங்கா திறப்பு விழாவுக்குச் சென்றார். அங்கே மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் (பொ) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டாலும் அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தாலும் கூட சமூக இடைவெளியை மறந்துவிட்டிருந்தனர். அடுத்து கோவில்பட்டி பிடாரி அம்மன் கோயில் திருப்பணி தொடக்கவிழாவிலும் இப்படியே நடந்தது. சொந்த விழா முதல் அரசு விழாக்கள் வரை அனைத்து விழாக்களிலும் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்ட விழாக்களில் கரோனா பரவலைத் தடுக்கும் சமூக இடைவெளியைக் காணவில்லை.

 

social distance Missing at Health Minister's Ceremony


இது குறித்து நகர மக்கள் கூறும் போது, தனித்திருக்க வேண்டும், விலகி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சொல்கிறது. ஆனால் இந்த வார்த்தைகள் பரவல் தொடங்கும் முன்பு மக்களும் அதைக் கேட்டு நடந்தார்கள். ஆனால் தற்போது தான் அதிகமாகப் பரவி வருகிறது அதற்கான பாதுகாப்பு இல்லாத நிலை வந்துவிட்டது. அரசு விழாக்கள் நடத்தினால் மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பது தெரியாதா? அப்பறம் எப்படி இப்படிக் கூட்டத்தைச் சேர்த்து விழா நடத்தினார்கள். பள்ளி, கல்லூரி திறந்தால், தேர்வு நடத்தினால் கரோனா பரவும் என்று சொல்லும் அரசாங்கம் இப்படிக் கூட்டம் கூட்டமாக ஒன்றாக நின்றால் கரோனா பரவும் என்பதை அறியவில்லையா?
 

http://onelink.to/nknapp


ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் அரசு தங்கள் அமைச்சர்களுக்கும் அதை வலியுறுத்த வேண்டியது அவசியம் தானே, இப்படிக் கூட்டம் கூட்டமாகக் கூடியதால் தான் சென்னையில் ஒருத்தரை இழந்திருக்கிறோம். அதேபோல இப்படிக் கூட்டம் கூட்டி இருக்கிறீர்களே என்று வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.