Skip to main content

தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத ஆவண எழுத்தர் அலுவலகத்திற்கு சீல்!

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

தனிமனித இடைவெளியுடன் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பொதுமக்களை காக்கவைக்கவோ, உட்காரவைக்கவோ கூடாது. அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வரவேண்டும் என மக்களுக்கும் வேண்டுக்கோள் விடுத்துள்ளது அரசு.

 

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும், பத்திரம் எழுதும் இடங்களில் மக்கள் கூட்டங்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளைப் பெரும்பாலான அலுவலகங்கள் கடைப்பிடிப்பதில்லை. 

 

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகம் முன்பாக பல ஆவண எழுத்தர்கள் உள்ளனர். இவர்களின் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. இதுபற்றிய புகார், உயர் அதிகாரிகளுக்குச் சென்றதன் அடிப்படையில், மாவட்ட கலால் அதிகாரி சரஸ்வதி, செப்டம்பர் 29ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத பத்திரப் பதிவு எழுத்தர் அலுவலகம் ஒன்றுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரின் உத்தரவு; ஆய்வுக்குப் பிறகு 59 கடைகளுக்கு சீல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
59 shops sealed for selling banned tobacco products in Erode

முதல் - அமைச்சர் உத்தரவின்படி உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, வருவாய் துறை, மாநகராட்சி நிர்வாகம், போலீசார், பொதுப்பணித்துறை ஆகியோர் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் பள்ளி கல்லூரி அருகிலும், கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கலெக்டர் உத்தரவின்படி கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் குழு ஆய்வு மேற்கொண்டதில் 59 கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 59 கடைகளுக்கும்  சீல் வைக்கப்பட்டு ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசின் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை, சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையினர் கொண்ட குழுவினர் முன்னிலையில்  வெண்டிபாளையம் மாநகராட்சி உரக்கடங்கில் அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 956 ஆகும். பொதுமக்கள் உணவு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story

பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்திற்கு சீல்!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
BJP Election office sealed

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பா.ஜ.க. சார்பில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர் ராஜா தலைமையில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என அந்த இடத்தை வாடகைக்கு வாங்கி, பாஜகவின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறி அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று பூட்டி சீல் வைத்துள்ளனர். சென்னை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் பாஜக தேர்தல் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.