Skip to main content

முகிலன் வழக்கில் புதிய திருப்பம்... தொடர்ந்து கிடைக்கும் தகவல்கள்

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

சமூக ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி காணாமல் போனார். அன்றைய தினம் அவர் மதுரைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தார் என்பது மட்டுமே கடைசியாக வந்த தகவல்... அதற்குமுன் ஸ்டெர்லைட் படுகொலை சம்மந்தமான சில ஆதாரங்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

mugilan


இந்நிலையில் இன்றோடு கிட்டதட்ட 120 நாட்கள் ஆகின்றன. கடந்த ஜூன் 6ம் தேதி ஹென்றி திபன் என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி அதிகாரிகள் முகிலன் குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், கிடைத்த தகவல்களை வெளியில் கூறினால் அவரை கண்டுபிடிக்கும் பணி மந்தப்படும் என்பதால் அதை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில் முகிலன் குறித்த புதிய துப்பு கிடைத்துள்ளது என்றுகூறி அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள் சிபிசிஐடி காவல்துறையினர் அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், வழக்கு சரியான பாதையில் செல்கிறது என்றும், விசாரணை பாதிக்கப்படும் என்பதால் சிபிசிஐடியின் அறிக்கைகளை வெளியிடமுடியாது என்றும் தெரிவித்தனர். வழக்கை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி வருகை; சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் கைது

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi's visit; Environment activist Mugilan arrested

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார், இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 2.06 மணிக்கு சூலூருக்கு வர இருக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல்லடத்தில் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் பாஜக யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

இந்த விழாவிற்காக தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் 5 லட்சம் பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மாலை  5.15 மணிக்கு சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கதிட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாலை 6:45 மணிக்கு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40க்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Prime Minister Modi's visit; Environment activist Mugilan arrested

கோவை மதுரை ஆகிய இடங்களில் பிரதமர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி திருப்பூர் வருகையில் அவருடைய வருகையை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்த இருப்பதாக சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான முகிலன் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

கலைஞருக்கு நினைவுச் சின்னம் நிறுவுவது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் (படங்கள்)

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

மறைந்த முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கலைஞரின் நினைவாக பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் சீமான், திருமுருகன் காந்தி, முகிலன் உள்ளிட்டவர்கள் இந்த திட்டத்திற்கு எதிராகப் பேசியதால் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.