Advertisment

"தமிழகம் சோமாலியாவாக மாறும்!"- முகிலனின் முழக்கம்!

ஜல்லிக்கட்டு வழக்கில் முகிலன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

Advertisment

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கடந்த 2017- ஆம் ஆண்டு, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இன்று (04/11/2019) மதுரை மாவட்ட குற்றவியல் 4- வது நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக வேறொரு வழக்கில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகிலன் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். வழக்கு விசாரணை நடைபெற்றதையடுத்து, இந்த வழக்கை நவம்பர் 22- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது நீதிமன்றம் .

Advertisment

SOCIAL ACTIVITIES MUKILAN MADURAI COURT JALIKKATTU ISSUES

நீதிமன்ற வளாகத்தில் முழக்கமிட்ட முகிலன் "மத்திய அரசின் புதிய வேளாண்மை ஒப்பந்தத்தால் தமிழகம் சோமாலியாவாக மாறும். தமிழகத்தை கார்ப்ரேட் நிறுவனத்திற்கு தாரை வழங்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும்." என்றார்.

MADURAI COURT mukilan SOCIAL ACTIVITIES Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe