Skip to main content

உணவு கிடைக்காமல் தவித்த வடமாநில கூலிதொழிலாளர்களுக்கு சப்பாத்தி வழங்கிய சமூக ஆர்வலர்!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்ல் பீகார், ஒரிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட பணிகளில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்துவருகிறார்கள்.

 

    social activist gave Chapathi to Northern state laborers



இவர்கள் கரானோ தொற்று ஊரடங்கு உத்தரவையொட்டி, வேலையில்லாமல் ஒரே இடத்தில் முடங்கி கிடக்கிறார்கள். இதனால் அவர்கள் சாப்பாட்டுக்கு சிரமபட்டு வந்தனர். அவர்களுக்கு கடந்த வாரம் சிதம்பரம் சிவில் இன்ஜினியர் அசோசியன் சார்பில் அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கப்பட்டது. அந்த பொருட்கள் ஒரு வாரம் வந்துள்ளது. அதன்பிறகு அவர்கள் பசியால் அவதி அடைவதாக சிதம்பரம் ஷண்முகவிலாஸ் கடையின் உரிமையாளரும், சமூக ஆர்வலருமான கணேஷ்க்கு சிதம்பரம் காவல்துறை சார்பில் தகவல் தெரியவர, அவர் சம்பந்தப்பட்ட வடமாநில கூலித்தொழிலாளர்கள் அனைவருக்கும் சப்பாத்தியை நேரிடையாக சென்று வழங்கியுள்ளார். இதனை பெற்ற தொழிலாளர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் காவல்ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட காவல்துறையினர் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஊரடங்கில் ஏழை மக்களை நோக்கி பல்வேறு உதவிகளை சிலர் செய்துவருகிறார்கள். மொழிபிரச்சனையால் ஒரே இடத்தில் முடங்கி கிடக்கும் வடமாநிலங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்களுக்கு உதவி கிடைப்பதில் சிரமம் உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.