Skip to main content

குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் 

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

So far 13 lakh people have applied for the Group 4 exam

 

குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

 

7382 அரசுப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போதுவரை குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28ஆம் தேதிவரை கால அவகாசம் உள்ளதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்